தமிழக அரசின் 2 அரசாணை ரத்து ஐகோர்ட் உத்தரவு
3/15/2016 3:22:02 PM
சென்னை: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாதவர்களை நியமிக்க அரசு தடை விதித்தது. இதை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முமுவதும் உள்ள தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடை கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளிகள், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை, நீதிபதி அரிபரந்தாமன் சென்னை ஐகோர்ட்டில் விசாரித்தார். தனியார் அரசு பள்ளிகள் சார்பாக, வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜராகி, அரசின் 2 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதை நீதிபதி ஏற்று கொண்டு, 2 அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி தீர்ப்பில், பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லாதவர்கள் நியமிக்கப்படாததால் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல பள்ளிகளில் பணிகள் குவிந்துள்ளது. இந்த அரசாணைகள் சட்டவிரோதமானது. அவைகளை ரத்து செய்கிறேன்’ என்றார்.