இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

துபாயில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க 10 கிராமங்கள் முடிவு

3/15/2016 3:19:44 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 23 மீனவர்கள்  துபாயில் மீன்பிடி தொழில் ஈடுபடுவதற்காக கடந்த 2013ம் ஆண்டு சென்றனர். கடலில் மீன் பிடிக்கும் போது அரேபியா மீனவர் கமிஸ் என்பவர் மாயமானார். இந்த வழக்கு தொடர்பாக, தமிழக மீனவர்கள் 23 பேரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், இவர்கள் சாட்சியங்களாக மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். யார் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால், எவ்வித வேலையும் இன்றியும், இருப்பிடம், உணவின்றி தமிழர்கள் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்ய முன்வரவில்லை. எனவே, 23 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி 4 முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கடந்த ஓராண்டுக்கு முன்பு மனு அளிக்கப்பட்டது.

மேலும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தவித்து வரும் மீனவர்களால், தமிழகத்தில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல், உணவின்றியும் அவதிப்படுகின்றனர். நாளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்ப சேர்ந்தவர்கள் தனித்தனியாக மனு அளிக்க உள்ளனர். மனுவை வாங்க மறுத்தால், அங்கேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு 23 மீனவர்களை மீட்க வேண்டும், இல்லாவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும் சில
  • ஸ்டாலின் திடீர் நடைபயணம்



  • விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்?



  • ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் குடியிருப்போர் சங்கங்களிடம் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு



  • உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் வாங்க மாட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி



  • மெரினா கடற்கரையில் குளித்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது



  • காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு காரணம் என்ன?



  • அதிகரிக்கும் மின் பற்றாக்குறை



  • 4வது கட்ட பட்டியல் வெளியீடு பாஜ வேட்பாளர் 26 பேர் அறிவிப்பு



  • ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் சஸ்பெண்ட் ரத்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு



  • எம்பிபிஎஸ்-பிடிஎஸ் படிப்புக்கு மே 9முதல் விண்ணப்பிக்கலாம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]