மேற்கு வங்க 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
3/15/2016 3:17:10 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதற்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது.மேற்கு வங்க சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 4 தொடங்கி 6 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 4 மற்றும் 11 தேதிகளில் இரண்டு பாகங்களாக நடத்தப்படுகிறது. 4ம் தேதி வாக்குப்பதிவுக்கான அறிவிப்பாணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 11ம் தேதி வாக்குப்பதிவுக்கான அறிவிப்பாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து 11ம் தேதி வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 21ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 22ம் தேதி நடைபெறும்.
மார்ச் 26ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். ஏப்ரல் 11ம் தேதி மேற்கு மிட்னாபுர், பன்குரா, புர்த்வான் மாவட்டங்களில் மொத்தம் 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வாக்குசாவடிகளில் சாதாரண கேமிரா, வீடியோ கேமிரா மற்றும் வெப்கேமிரா பொருத்தப்படும் என மாநில கூடுதல் தலைமை தோ்தல் அிதகாரி சர்கார் தெரிவித்தார். 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் தங்களது பணியை தொடங்குவார்கள் என சர்கார் மேலும் தெரிவித்தார். இதற்கிடையில் மார்க்சிஸ்ட், காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலை போக்க இருகட்சி தலைவர்களும் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.