அப்ரிடி ஏன் அப்படி பேசினார்? கவாஸ்கர் ருசிகரம்
3/15/2016 3:12:15 PM
மும்பை: உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக, நீண்ட இழுபறிக்கு பின் பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது. அந்த அணியின் கேப்டன் அப்ரிடி அளித்த பேட்டி ஒன்றில், பாகிஸ்தானை விட இந்தியாவில்தான் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது என கூறியிருந்தார். இந்தியாவை புகழ்ந்து பேசியதன் மூலம், பாகிஸ்தானுக்கு தேச துரோகம் செய்து விட்டதாக, அந்நாட்டின் மூத்த வக்கீல் அசார் சாதிக், அப்ரிடிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். முன்னாள் கேப்டன்மியான்தத்தும், அப்ரிடிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அப்ரிடி ஏன் அவ்வாறு பேசினார் என கவாஸ்கர் கூறியது: கொல்கத்தாவில் 19ம் தேதி நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை மனதில் வைத்து, இந்திய ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்காகதான் அப்ரிடி இப்படி ஸ்மார்ட்டாக பேசியுள்ளார். அப்ரிடியும், பாகிஸ்தான் வீரர்களும் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்.