இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி பாமகவுடன் பாஜ ரகசிய பேச்சுவார்த்தை

3/15/2016 2:43:13 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக பாமகவுடன் பாஜ ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜ அணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இருந்து மதிமுக அதிரடியாக வெளியேறியது.இந்த நிலையில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாஜ முடிவு செய்தது. இதற்காக தேமுதிக, பாமகவுடன் பலகட்டமாக பாஜ பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அதாவது, எனது தலைமையில் தான் கூட்டணி என்று விஜயகாந்த் கூறினார். பாமகவும் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சியும் பாமக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று தெரிவித்துவிட்டது.

இதற்கிடையே மத்திய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகரும் கூட்டணி தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், பாஜ தனித்து விடும் நிலைக்கு உருவானது. இந்த நிலையில், பாஜ 234 தொகுதிக்கும் நேர்காணலை நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடத்தி முடித்தது. நேர்காணலின் போது தனித்து போட்டியிட வேண்டும் என்று நேர்காணலில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர். இது ஒரு புறம் இருந்தாலும் பாஜ இன்னும் கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேசி கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் பாமகவுடன் கூட்டணி தொடர்பாக பாஜ ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கூட்டணி குறித்து இதுவரை அவரை அவர்கள் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேலூரில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாமகவுடன் கூட்டணி குறித்து பாஜ பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், கூட்டணி குறித்து நாங்கள் எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. கூட்டணி உள்ளதா? இல்லையா என்று தற்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது” என்றார்.கூட்டணி தொடர்பாக பாஜ, பாமகவுடன் பல முறை பேசியது. ஆனால், அப்போது எல்லாம் ராமதாஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது திடீரென ராமதாஸ் கருத்தை தெரிவித்துள்ளார். இதனால், பாஜ - பாமக கூட்டணி உருவாகுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஸ்டாலின் திடீர் நடைபயணம்



  • விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்?



  • ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் குடியிருப்போர் சங்கங்களிடம் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு



  • உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் டெபாசிட் வாங்க மாட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி



  • மெரினா கடற்கரையில் குளித்த மாணவன் உடல் கரை ஒதுங்கியது



  • காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதத்துக்கு காரணம் என்ன?



  • அதிகரிக்கும் மின் பற்றாக்குறை



  • 4வது கட்ட பட்டியல் வெளியீடு பாஜ வேட்பாளர் 26 பேர் அறிவிப்பு



  • ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் சஸ்பெண்ட் ரத்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு



  • எம்பிபிஎஸ்-பிடிஎஸ் படிப்புக்கு மே 9முதல் விண்ணப்பிக்கலாம்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]