தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்க வந்த பெண் கைது
3/14/2016 3:07:04 PM
சென்னை: தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் மாநில தலைவி கலைச்செல்வி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மனு கொடுக்க வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது கலைச்செல்வி நிருபர்களிடம் கூறுகையில், ‘’ தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு 2 மாதங்கள் மதுக்கடைகள், பார்களை முழுமையாக மூடவேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கடந்த 7ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுபற்றி எனக்கு எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கேட்பதற்காகவும் எதிர்ப்பை பதிவு செய்வதற்காகவும் வந்தேன்’ என்றனர்.