இந்தியாவில் எங்கள் பணி என்ன என்பது தெரியும் பாக். பெண்கள் அணி கேப்டன் சனா மிர் பேட்டி
3/14/2016 2:53:56 PM
சென்னை: உலக கோப்பை டி20 தொடரில் பங்கேற்பதற்காக, நீண்ட இழுபறிக்கு பின் பாகிஸ்தான் பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணிகள், இந்தியா வந்துள்ளன. ஆண்கள் அணி கொல்கத்தாவிலும், பெண்கள் அணி சென்னையிலும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளன. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பெண்கள் அணி கேப்டன் சனா மிர் அளித்த பேட்டி: நாங்கள் இங்கே கிரிக்கெட் விளையாடத்தான் வந்துள்ேளாம். எங்கள் பணி என்ன என்பதில் நாங்கள் மிக தெளிவாக உள்ளோம். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள்தான் மிகவும் பதற்றமானதாக இருக்கும். ஆனால் இந்தியாவை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலக கோப்பையில் எங்களால் இந்தியாவை வீழ்த்த முடியும். பாகிஸ்தான் ஆண்கள் அணியால் அதை செய்ய முடியவில்லை. இதனால் இது எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விராத் கோஹ்லி சிறந்த வீரர். எனினும் டோனிதான் என்னை அதிகம் கவர்ந்துள்ளார். ஏனெனில் இந்திய அணியை அவர் வழி நடத்தும் விதம், களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் அவரை அவரே கையாளும் விதம் தான். ேடானி மிகச் சிறந்த கேப்டன். இவ்வாறு அவர் கூறினார்.