சமந்தாவின் புதிய கண்டிஷன்கள் தயாரிப்பாளர்கள் ஷாக்
3/14/2016 2:51:19 PM
தமிழ், தெலுங்கில் நடிக்கும் சமந்தா பிரத்யூஷா அமைப்பு மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி வருகிறார். விஜய் ேஜாடியாக அவர் நடித்துள்ள ‘தெறி’, சூர்யா ஜோடியாக நடித்துள்ள ‘24’ ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளது. சமந்தாவைபற்றி திரையுலகில் சிலர் புகார் கிளப்பி உள்ளனர். படப்பிடிப்பில் பங்கேற்க வந்தால் தங்குவதற்கு செவன் ஸ்டார் ஓட்டலில் அறை கேட்கிறார். அவருக்கு ஒன்றேகால் கோடிக்கும் அதிகமாக சம்பளம் தரப்பட்டும் ஆடம்பரமான தங்கும் இடம் தர கேட்கிறார். படப்பிடிப்புக்கு வர முதல்வகுப்பு விமான டிக்கெட்டை தயாரிப்பாளர் புக் செய்ய வேண்டும். உடன் வரும் குடும்பத்தினர், உதவியாளர்களுக்கும் முதல்வகுப்பு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று கண்டிஷன் விதிக்கப்படுகிறது.படப்பிடிப்பு நேரத்தில் சமந்தாவுக்கு ஓய்வு கிடைத்தால் சொந்த ஊருக்கு செல்லவும் விமான டிக்கெட் பதிவு செய்ய தயாரிப்பாளரை கேட்கிறார். நடிகை என்ற அந்தஸ்த்தில் அவர் ஆடம்பரமாக இருக்க ஆசைப்படுகிறார் என சரமாரி சிலர் புகார் எழுப்பி உள்ளனர்.