பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் 41 சவரன், பணம் கொள்ளை
3/14/2016 2:49:43 PM
ஆற்காடு: வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் சலீம் நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் தயாசங்கர்(51). வேலூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சசிகலா(46). இவர்களது மகன் அரி(22), மகள் காயத்ரி(17). அரி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். காயத்ரி ரத்தினகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.கிருஷ்ணகிரி அடுத்த போச்சம்பள்ளி அருகே உள்ள பட்டகம்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தயாசங்கரின் தந்தை டீக்காராமன் தீட்சித் என்பவர் கடந்த 2ம் தேதி இறந்தார். இதில் கலந்து கொள்ள தயாசங்கர் கடந்த 10ம் தேதி குடும்பத்துடன் சென்றார். இன்று காயத்ரிக்கு பிளஸ்2 தேர்வு உள்ளதால் நேற்றிரவு தயாசங்கர் குடும்பத்துடன் காரில் வீட்டுக்கு வந்தார். அப்போது முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 2 அறைகளில் இருந்த 3 பீரோக்களில் வைத்திருந்த 41 சவரன் தங்கநகை, ரூ.3 ஆயிரம் ெராக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.புகாரின் பேரில் ஆற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை பதிவு செய்தனர்.