ஏழுமலையான் கோயிலில் ரூ. 2.32 கோடி காணிக்கை
3/14/2016 2:49:21 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 224 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 29 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 10மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.மலைப்பாதை வழியாக நடந்துவந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 16 அறைகளில் காத்திருந்து 7 மணிநேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர்.நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ. 2.32 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.