மதுராந்தகம் அருகே சாய்ராம் கோயில் 3ம் ஆண்டு விழா
3/14/2016 2:46:34 PM
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கடப்பேரியில் சீரடி மதுராநாத சாய்ராம் கோயிலின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது.இதையொட்டி காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து 108 பால் குடங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதையடுத்து, சாய்பாபாவுக்கு பால் அபிஷேகமும் சிறப்பு ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன.இவ்விழாவை முன்னிட்டு ஆலய வளாகம் முழுவதும் மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இவ்வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்களுக்கு இரவு அன்னதானமும் வழங்கப்பட்டது.