இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

பாரீசில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் விவரம் தெரிந்தது உண்மை தன்மை குறித்து விசாரணை

3/12/2025 4:44:52 PM
ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு அசாமில் இறுதி கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வு


பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த நவம்பர் மாதம் தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளின் விவரம் கிடைத்துள்ளது. இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடந்து வருகிறது.பாரீசில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 13ம் தேதியன்று தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த அரங்கு, காபி ஷாப் உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதலுக்கு பிறகு பாரீசில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு இறங்கியது. தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பாரிசில் நாசவேலையில் ஈடுபட்ட ஐஎஸ் தீவிரவாதிகளின் பெயரை ஜெர்மனியை சேர்ந்த புலனாய்வு குழு ஒன்று வெளியிட்டுள்ளது.

பாரிசின் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஒமர்(29), பஸ் டிரைவராக பணிபுரிந்த சமி(28), முகமது (23) ஆகியோர் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் இணையதளத்தில் 3 பேரின் பெயர்கள், அவர்களின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள்  இடம்பெற்றிருப்பதாக ஜெர்மனி குழு தெரிவித்துள்ளது. இதேபோல் 22 ஆயிரம் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குழுவினர் கூறியுள்ளனர்.கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களில் பெரும்பாலான விவரங்கள் போலியானவை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெர்மனி புலனாய்வு குழு வெளியிட்ட தகவல்கள் குறித்த உண்மை தன்மையை கண்டறியும் நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசு இறங்கியுள்ளது.

மேலும் சில
  • இரண்டாம் உலகப்போர்



  • இணையங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது



  • வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்



  • அமெரிக்காவின் கன்சாஸ் பகுதி



  • மான்கள் என்றாலே கொள்ளை அழகு



  • சிரியாவில் 300 தொழிலாளர்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் மீட்க தீவிர நடவடிக்கை



  • அமெரிக்காவின் புளோரிடா மாகாணம்



  • வியட்நாம் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்



  • செல்ல பிராணிகளான நாய்கள்



  • நவீன யுகத்தில் ரோபோக்களின் பயன்பாடு



Facebook

Twitter

ஹீரோவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]