புதுமுகங்கள் என்ட்ரி டபுள் மடங்கு ஆக்கும் இயக்குனர்
3/11/2025 2:57:41 PM
சமீபகாலமாக புதுமுகங்களின் வருகை தமிழ் படங்களில் அதிகரித்துள்ளது. வருடம் முழுவதும் 100க்கும் குறையாமல் புதுமுகங்கள் என்ட்ரி நடக்கிறது. இந்த ஆண்டு அது டபுள் மடங்காகும் என்று தெரிகிறது. ‘பதனி’ என்ற ஒரேபடத்தில் 120 புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். இதுகுறித்து அப்பட இயக்குனர் ஆர்ஜே.பிரகாஷ் கூறும்போது,’சுபாஷ்-ஹிமோனா, பரணிதரன்-பானு, பூவை அருண்-கோமதி, ராக்கேஷ்-பிரியா, கிளார் குரு-மதுமிதா என 5 ஜோடிகளுடன் கோவை செந்தில், மேஜிக் சர்வான், மீனம்மா, அன்னலட்சுமி உள்பட மொத்தம் 120 புதுமுகங்கள் இப்படத்தில் அறிமுகமாகின்றனர். தொழில் அதிபர், வட்டிக்காரர்களால் பாதிக்கப்படும் 2 பேர்களுடன் ஊருக்கு நல்லது செய்துவிட்டு வறுமையில் வாடும் நண்பர்கள் சிலரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றனர். அப்போது ஒரு கொலையும் திருட்டும் நடக்கிறது. அதைச் செய்தது யார் என்பதே கிளைமாக்ஸ். ஜி.உத்தமன் தயாரிக்கிறார். சுருதி பிரபா இசை. குலோத்துங்கவர்மன் ஒளிப்பதிவு’ என்றார்.