இலவச பொருட்கள் வழங்கியதில் அதிமுக அரசு ரூ. 1500 கோடி வரை தனியார் நிறுவனங்களுக்கு பாக்கி முன்னாள் அமைச்சர் திடுக் தகவல்
3/11/2025 2:40:13 PM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஓ.சிறுவயலில் தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள், பல முதல்வர்கள் இருந்துள்ளனர். ஆனால் இலக்கு நிர்ணயம் செய்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி மட்டுமே. ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கு கூட ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வழங்க வேண்டிய நிலை உள்ளது. திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் புதிய முதலீடுகள் வந்தன. ஆனால் 3 மாதங்களுக்கு முன்பு உலக முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தி ரூ.2.42 லட்சம் கோடி புதிய தொழில் முதலீடு வந்துள்ளதாக அறிவித்தனர். ஆனால் 10 ஆயிரம் கோடிக்கு கூட முதலீடு வரவில்லை.இலவச பொருட்கள் வழங்கிய வகையில் தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளனர். சட்டம், ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.