கழிவறை அவசியம் குறித்து மாணவர்கள் பேரணி
3/5/2025 1:29:21 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே வண்ணான்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நேற்று தனிநபர் இல்ல கழிவறை குறித்து மாணவ, மாணவிகளின் பேரணி நடைபெற்றது. இதில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட அணி தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தேவகி நந்தனன், ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.