இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் உடலை புதைக்காமல் எரிக்கச் சொல்லி மிரட்டிய ஜெ. அரசு : வைகோ தாக்கு

3/5/2025 1:23:42 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

திண்டிவனம்: ,மக்கள் நலக்கூட்டணியின் 3ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயண கூட்டம் நேற்று திண்டிவனத்தில் நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  பேசியதாவது: கூட்டணியை உடைக்க எதிரிகள் சர்ப்ப வியூகம் செய்தால் கருட வியூகம் அமைத்து தகர்த்திடுவேன். கவுரவர்கள் படையில் அனுபவமிக்க படை  தளபதிகள் இருந்தாலும் குறைந்த அளவில் இருந்த பஞ்சபாண்டவர்களிடம் தோற்றனர். ஆந்திரா திருப்பதியில் 20 தமிழர்கள் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி  படுகொலை செய்யப்பட்டபோது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை காப்பாற்ற இறந்தவர்களின் உடலை புதைக்காமல் எரிக்க வேண்டுமென காவல் துறை  மூலம் உறவினர்களை மிரட்டியது ஜெ அரசு.

மக்கள் நலக்கூட்டணி ஜெயிக்கும், ஆட்சி அமைக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:முதல் கையெழுத்து என முழங்கும் அன்புமணி  மத்திய அமைச்சராக இருந்த போது போட்ட முதல் கையெழுத்தால் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளார். ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில்  அடைக்கப்பட்டவர். மேல்முறையீட்டில் வெளியே வந்தார். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி எங்கள் கூட்டணியில் உள்ள தலைவர்கள் மீது  விரல் நீட்டி ஊழல் குற்றச்சாட்டை கூற முடியுமா?.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: ஊருக்கு ஊர் சாராயக்கடை திறந்து உன் பாக்கொட்டில் இருந்து பணத்தை எடுத்து உனக்கே மிக்ஸி,  கிரைண்டர், பேன், ஆடு மாடு இலவசமாக கொடுப்பது எவ்வளவு திருட்டுத்தனம். தமிழ்நாட்டை விட இளிச்சவாயர்கள் எங்கும் கிடையாது என நினைக்கிறார்கள்.  திமுக, அதிமுக இரண்டு பெரிய சக்திகளை நமது 4 சிறிய கட்சிகள் ஒன்று சேர்ந்து சாய்க்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்: தமிழகத்தில் 20 ஆண்டுகாலமாக இயற்கை வளங்கள் கொள்ளை நடந்திருக்கிறது. தென்பெண்ணை ஆற்று மணல்  கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை காலகாலமாக நடந்தது தான். இதில் கிரானைட் கொள்ளையால் தமிழக அரசுக்கு ஒரு லட்சத்து 6  ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதை சகாயம் அறிக்கை அளித்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.

மேலும் சில
  • செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணி அதிகாரிகள் மெத்தனம்



  • தாம்பரம் தொகுதியில் பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு வேதசுப்பிரமணியம் துவக்கினார்



  • பிரஸ்செல்சில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு



  • அதிமுகவுடன் கூட்டணியா? மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி



  • இம்மாத இறுதியில் கூட்டணி முடிவு ஜி.கே.வாசன் பேட்டி



  • தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நகைப்புக்குரிய நிகழ்வு: பாமக



  • கூட்டணி ஆட்சி மந்திரிசபையில் இடம் தேமுதிக உறுதி என வைகோ தகவல்



  • ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் குதித்த சிறுத்தை?



  • மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி



  • ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் எப்ஐஆர்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]