இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருச்சியில் ரூ 1.5 லட்சம் பறிமுதல்

3/5/2025 1:22:35 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

திருச்சி,தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி,  கேரளம் ஆகிய 3 மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மே 16ம் தேதி ஓட்டுப்பதிவும், மே 19ம் தேதி ஓட்டு  எண்ணிக்கையும் நடக்கிறது.

தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவித்த 2  மணி நேரத்தில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் கடைசியாக என்னென்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன என்பதை தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க  வேண்டும் என ஏற்கனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன்  வேண்டியவர்களுக்கு சில சலுகைகள் காட்டி, அதனை முன்தேதியிட்டு கணக்கு காட்டுவதை தடுக்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

எனவே நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இதைத்தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த  முதல்வரின் போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. அனைத்து செக்போஸ்ட்களிலும் வாகன தணிக்கைகள் தொடங்கின. அமைச்சர்கள் அரசு வாகனங்கள்,  அரசு விருந்தினர் இல்லங்களையோ, எந்திரங்களையோ பயன்படுத்தக்கூடாது. அரசு விழாக்களில் அமைச்சர்கள் பங்கேற்க கூடாது. இந்த திட்டத்தை  செய்யப்போகிறோம், ரோடு போடப்போகிறோம், குடிநீர் வசதி செய்து தரப்போகிறோம் என எதையும் அறிவிக்க கூடாது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் புதிய நியமனங்கள் செய்யக்கூடாது. இடமாறுதல், பதவி உயர்வு அளிக்க கூடாது. அரசு பணியாளர்களை  நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களுக்கு சாதகமாக அமைச்சர்கள் பயன்படுத்தக்கூடாது.வாக்காளர்களை கவரும் வகையில் பணமோ, பொருளோ வழங்க கூடாது. பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கத்தையோ, நகை போன்ற விலை உயர்ந்த  பொருட்களையோ எடுத்து செல்லும்போது அதற்கான ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். சாலைகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் விளம்பரம்  செய்யக்கூடாது. தனியார் சுவர்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் முறைப்படி எழுத்துபூர்வமாக அனுமதி பெற்று விளம்பரம் செய்ய வேண்டும்.

வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ள இடம் நேரம்  குறித்து உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்து அனுமதி பெறவேண்டும்.  இதனை கண்காணிக்க தேர்தல் கமிஷன் பறக்கும்படை, கண்காணிப்பு படை, வீடியோ  கண்காணிப்பு குழுக்கள் வரவு செலவை கண்காணிக்கும் குழுக்களை உருவாக்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வட்டார வளர்ச்சி அதிகாரி அந்தஸ்தில் உள்ள  ஒரு அதிகாரி தலைமையில் 3 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 படைகளிலும் தலா 3 போலீசாரும் இருப்பார்கள். வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு தேர்தல் பணி நிறைவடைந்தது என தேர்தல் கமிஷன் அறிவிக்கும் வரை இந்த உத்தரவுகள்  நடைமுறையில் இருக்கும்.

திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் நேற்று இரவு தேர்தல் அதிகாரிகள் வாகன  தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி வந்த காரில் ரூ.1.5 லட்சம் வைத்திருந்தனர். அவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். விசாரணையில் காரில் வந்தவர்கள் வியாபாரிகள் என்றும் அவர்கள் பொருட்கள் கொள்முதல் செய்ய பணம் கொண்டு வந்ததால் அந்த பணத்தை  அவர்களிடம் திரும்ப ஒப்படைத்து விட்டனர்.

மேலும் சில
  • கமுதி அருகே பயங்கரம் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை



  • மற்றொரு வாலிபருடன் ஆட்டம் காதலியை கத்தியால் குத்திய காதலன்



  • தாம்பரம் அருகே சாலை விபத்தில் 2 பேர் பரிதாப பலி : போலீசார் விசாரணை



  • இன்ஸ்பெக்டர் மனைவி கொலை வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • சங்கர் கொலை வழக்கு மகளை கைவிட மறுத்ததால் கொல்ல உத்தரவிட்டேன்: தந்தை வாக்குமூலம்



  • 11ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் வாலிபர் கைது



  • வாக்காளர்களுக்கு வினியோகமா? 45 கிலோ வெள்ளி கொலுசுகள் சிக்கின



  • கும்மிடிப்பூண்டி அருகே வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் பறிமுதல்



  • வியாபாரி தூக்கிட்டு தற்கொலை



  • ஆவடி அருகே மனைவி மீது கெரசின் ஊற்றி தீ வைப்பு கணவரிடம் விசாரணை



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]