இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மேற்கு வங்க தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக கன்னையா குமார் பிரசாரம் -சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தகவல்

3/5/2025 1:07:53 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

கொல்கத்தா, -மேற்கு வங்கத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற தேர்தலில் இடது சாரி கட்சிகளை ஆதரித்து கன்னையா குமார் பிரசாரம் செய்வார் என சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.நேரு பல்கலையில் அப்சல் குரு நினைவு தினம் நிகழ்ச்சியின் போது தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேரு பல்கலை கழக விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மத்திய அரசு தனது நடவடிக்கையின் காரணமாக அரசியலில் கன்னையா குமார் என்ற புதிய நட்சத்திரத்தை உருவாக்கி விட்டது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலடியாக, கன்னையா குமாரின் கட்சி நாடாளுமன்றத்தில் ஒற்றை இலக்கத்தில்தான் உள்ளது. தேவைப்பட்டால் அவர் கல்வியை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து அந்த கட்சிக்கு பாடுபடலாம் என்று வெங்கய்யா நாயுடு கிண்டல் அடித்தார்.இந்த சூழலில் தற்போது மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் இடது சாரிகள் சார்பில் கன்னையா குமார் பிரசாரம் செய்வார் என சிபிஎம் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவி–்த்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்க தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்கள், இளைஞர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் சக்தியை முதன்முறையாக நாடு நேரிடையாக பார்த்துள்ளது. மேற்கு வங்கத்தில் தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அங்கு எந்த வித வன்முறைக்கும் இடம் தரக் கூடாது. எனவே அவ்வாறு நடக்க வேண்டும் என்று கருதினால் இதற்கான பொறுப்பை மாநில போலீசாரிடம் ஒப்படைக்க கூடாது என்றார். இதற்கிடையில் நான் ஒரு மாணவன், அரசியல்வாதி இல்லை என கன்னையா குமார் கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி மே 5ம் தேதி வரை ஆறு கட்டமாக தேர்தல் நடக்கிறது.

மேலும் சில
  • பெல்ஜியம் குண்டு வெடிப்பு இந்தி பாடகர் அபிஜித் குடும்பம் சிக்கி தவிப்பு



  • ஆம் ஆத்மி அரசுக்கு கவர்னர் நஜீப் பாராட்டு



  • மே.வங்க சட்டமன்ற தேர்தல் பாஜ 3வது பட்டியல் வெளியீடு



  • குண்டுவெடிப்பு நடந்த பிரஸ்செல்ஸ் நகருக்கு மோடி 30ம் தேதி பயணம்



  • அகமதாபாத்தை சேர்ந்தவர் ராம் சிங் சவுகான்



  • ராகுலுடன் கன்னையா குமார் சந்திப்பு



  • காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது மெகபூபா பேட்டி



  • மும்பை தாக்குதல் குற்றவாளி ஹெட்லியிடம் நாளை குறுக்கு விசாரணை



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ. 3 கோடி காணிக்கை



  • அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய்க்கு ரூ. 5 கோடி சொத்து



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]