இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

காவல்துறையில் காமரசக் கறை: திருப்பதி டிஎஸ்பியின் மன்மத லீலைகள் பெண் போலீஸ், சிறுமி புகாரால் பரபரப்பு- அம்பலமாக்கினார் 2வது மனைவி

3/5/2025 1:06:28 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

திருமலை, -ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் முகத்தை மூடியபடி கேமரா முன் வந்த ஒரு பெண், தன்னை திருப்பதி டிஎஸ்பி சீனிவாசலுவின் 2வது மனைவி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் சொன்ன தகவல்கள் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு அனந்த்பூர் மாவட்டத்தில் ஒரு வழக்குத்தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். இதுதொடர்பாக அவ்வப்போது சீனிவாசலுவை போனில் தொடர்பு கொண்டேன். அப்போது, அவர் என்னிடம், தான் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர் என்றும், இதனால், தற்போது தனிமையில் வாடுவதாகவும் வேதனையுடன் கூறினார்.

இதைத்தொடர்ந்து, நானும், அவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தோம். பின்னர், எனது கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டார். அதே பகுதியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தோம். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு திருப்பதிக்கு மாற்றப்பட்டார். புதிய வீடு பார்த்து விட்டு என்னை அழைத்து செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அதன்பிறகு என்னை தொடர்பு கொள்ளவில்லை. மேலும், நான் தொடர்பு கொண்டாலும் பேச மறுத்தார். இதனால் சந்தேகமடைந்த நான் திருப்பதிக்கு சென்று எனக்கு தெரிந்த போலீசாரிடம் விசாரித்தேன். அப்போது, சீனிவாசலுவுக்கு திருப்பதியில் ஒரு குடும்பம் இருப்பது தெரியவந்தது. அவர் எத்தனையாவது மனைவி என்பது தெரியாது. மேலும், போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் உள்ளிட்ட பல பெண்களுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். மேலும், தனக்கு கீழ் பணிபுரியும் பெண் போலீசாரை மிரட்டி தனது இச்சைக்கு இணங்க வைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

அதேபோல், தனது வீட்டில் வேலை செய்யும் 16 வயது சிறுமியையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் போலீசார் புகாரை வாங்க மறுக்கின்றனர். மேலும், இவரால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும், அந்த நிகழ்ச்சியில் சீனிவாசலுவால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக ஒரு பெண் போலீசும், 16 வயது சிறுமியும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து தெரிவித்தனர். தொடர்ந்து டிஎஸ்பி சீனிவாசலு சில பெண்களுடன் ஆபாசமாக இருப்பது போன்ற சில புகைப்படங்களை அந்த பெண் காண்பித்தார். போலீசார் புகார் வாங்க மறுப்பதால் தான் தொலைக்காட்சியை அணுகவேண்டியதாயிற்று. இதுபோன்ற பல்வேறு ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அதை வெளியிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்த தகவல் வெளியானதும் ஆந்திர மாநில போலீசார் இடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • பெல்ஜியம் குண்டு வெடிப்பு இந்தி பாடகர் அபிஜித் குடும்பம் சிக்கி தவிப்பு



  • ஆம் ஆத்மி அரசுக்கு கவர்னர் நஜீப் பாராட்டு



  • மே.வங்க சட்டமன்ற தேர்தல் பாஜ 3வது பட்டியல் வெளியீடு



  • குண்டுவெடிப்பு நடந்த பிரஸ்செல்ஸ் நகருக்கு மோடி 30ம் தேதி பயணம்



  • அகமதாபாத்தை சேர்ந்தவர் ராம் சிங் சவுகான்



  • ராகுலுடன் கன்னையா குமார் சந்திப்பு



  • காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக மோடியுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது மெகபூபா பேட்டி



  • மும்பை தாக்குதல் குற்றவாளி ஹெட்லியிடம் நாளை குறுக்கு விசாரணை



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ. 3 கோடி காணிக்கை



  • அசாம் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகாய்க்கு ரூ. 5 கோடி சொத்து



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]