வீட்டை உடைத்து 16 பவுன் கொள்ளை : தாம்பரத்தில் கைவரிசை
3/4/2025 3:53:04 PM
தாம்பரம்: தாம்பரத்தில் வீட்டின் கதவை உடைத்து 16 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.சென்னை தாம்பரம், முல்லை நகரை சேர்ந்தவர் முகமது அஸ்லாம் (54). பெயின்டர். இவரும் மனைவியும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர்.வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர். வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடந்தன.பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் முகமது அஸ்லாம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.