இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஜெ. தொகுதியில் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு : அதிமுக கவுன்சிலர், வட்ட செயலாளர் மீது புகார்

3/4/2025 3:51:21 PM
சென்னை உள்பட 8 மாநகர போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.5744 கோடி நஷ்டம் மத்திய அரசு பகீர் தகவல் நேபாளத்தில் சார்க் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடக்கம்: 16ம் தேதி இந்தியா - பாக். பேச்சுவார்த்தை


தண்டையார்பேட்டை: ஜெயலலிதா தொகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அதிமுக கவுன்சிலரும், வட்ட செயலாளரும் ஆக்கிரமிப்பு செய்ததால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு  வந்தது. தற்போது, இந்த சுகாதார நிலையம், காலி செய்யப்பட்டதால் கட்டிடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின்  பின்புறம் உள்ள சுமார் 150 சதுர அடி கொண்ட இடத்தை, கடந்த சில நாட்களாக சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த மீனவ  மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அந்த இடத்தில் அதிமுக கவுன்சிலர் சசிகலாவும், வட்ட செயலாளர் நாகலிங்கமும் சேர்ந்து ஆக்கிரமிப்பு  செய்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து திமுக வட்ட செயலாளர் கஜேந்திரன் என்பவர், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், ‘மாநகராட்சிக்கு  சொந்தமான இடத்தை அதிமுக கவுன்சிலரும், அதிமுக வட்ட செயலாளரும் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும்  கூறியிருந்தார். இந்த புகாரை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல்வர் ஜெயலலிதா தொகுதியிலேயே மாநகராட்சி இடத்தை  ஆக்கிரமித்ததாக அதிமுக கவுன்சிலர் மற்றும் வட்ட செயலாளர் மீது புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • தகவல் பலகையில் கார் மோதியதில் தந்தை, மகள் பரிதாப பலி



  • கரூர் மா.செ. விஜயபாஸ்கர் பதவி பறிப்பு : அதிமுகவில் களையெடுப்பு தொடரும்?



  • கிராமப்புறங்களில் ஜெ. படம் கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்



  • குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதி



  • மீஞ்சூர் அருகே மணல் திருடிய 3 டிராக்டர்கள் பறிமுதல்



  • அம்பத்தூர் அருகே ரயில் மோதி பெண் ஊழியர் பலி : கணவன் கண்ணெதிரே சோகம்



  • இலங்கை சிறையில் உள்ள 96 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்



  • உத்திரமேரூர் பகுதியில் அம்மா சிமென்ட் பெற லஞ்சம்



  • சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்துக்காக மோடி, அமித்ஷா தமிழகம் வருகை தனித்து போட்டியிடவும் வாய்ப்பு



  • பொன்னேரி நெடுஞ்சாலையில் டேங்கர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி



Facebook

Twitter

We searched the house white actress Deepika
வெள்ளைக்கார நடிகைக்கு வீடு தேடிய தீபிகா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]