இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

யாரு மேல கோவமோ தெரியல... காத்திருந்த மாணவிகளிடம் அமைச்சர் சுந்தர்ராஜ் சிடுசிடு

3/4/2025 2:40:56 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை விளையாட்டு துறை அமைச்சர் சுந்தர்ராஜ் மாலை 4 மணிக்கு பார்வையிடுவதாக இருந்தது. ஆனால் அவர் இரவு 7.45 மணிக்குத்தான் அங்கு வந்தார். பின்னர் அவர் விளையாட்டு விடுதி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.250 வீதம் அரசு செலவு செய்கிறது. இங்க நீங்க சாப்பிட வரல; திறமையாக விளையாடி பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.

அங்கிருந்த கரூரை சேர்ந்த மாணவியிடம், உங்கள் எம்எல்ஏ யார் என்று வினவினார். அப்போது அந்த மாணவி, பயந்தபடியே செந்தில்பாலாஜி என்று கூறினார். இதிலுமா சந்தேகம் என்று அவரிடம் பாய்ந்த அமைச்சர், உங்கள் எம்எல்ஏ செந்தில் பாலாஜிதான்; அமைச்சர் பதவியில் இருந்து எடுத்துவிட்டால் எம்எல்ஏ கிடையாதா என்று அதட்டினார். அத்துடன் ‘விளையாட்டில் வெற்றிபெறுவதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும் நீங்கள் பதக்கம் பெறாமல் இருந்தால் உங்களை என்ன செய்ய?’ என்று கடுமையாகச் சாடினார். இவ்வாறு அமைச்சர் கடுகடுப்புடன் எரிந்து விழுந்ததால் மாணவிகள் அனைவரும், ‘அடுத்து தங்களிடம் என்ன கேட்பாரோ?’ என்று அச்சத்துடன் கண்கலங்கி நின்றனர்.

விளையாட்டு விடுதி மாணவிகளைத் தொடர்ந்து, பெண் பயிற்சியாளரிடம் ‘எத்தனை மணிக்கு பயிற்சி அளிக்க வருவீர்கள்?’ என்று கேட்டார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், ‘அவர் காலை 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்’ என்றார். அதற்கு அமைச்சர், நான் உங்களிடம் (டிஎஸ்ஓவிடம்) கேள்வி கேட்கவில்லை, சம்பந்தப்பட்டவர் தான் பதில் கூற வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து, அதே பதிலை பெண் பயிற்சியாளர் கூறினார்.

அவர் மீதும் எரிந்து விழுந்த அமைச்சர், ஏராளமான போட்டிகளில் வெற்றிபெற்று அதிக அளவில் பதக்கம் பெறும் வகையில் மாணவிகளை தயார் படுத்தாதது சரியா என்று திட்டி தீர்த்தார்.அமைச்சரின் வருகைக்காக கால்கடுக்க நின்ற மாணவிகளிடம் லேட்டாக வந்த அமைச்சர் கடுகடுப்புடன் நடந்துகொண்டதால் அவர்கள் அச்சத்துடன் கண்கலங்கி அழுத சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணி அதிகாரிகள் மெத்தனம்



  • தாம்பரம் தொகுதியில் பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு வேதசுப்பிரமணியம் துவக்கினார்



  • பிரஸ்செல்சில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு



  • அதிமுகவுடன் கூட்டணியா? மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி



  • இம்மாத இறுதியில் கூட்டணி முடிவு ஜி.கே.வாசன் பேட்டி



  • தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நகைப்புக்குரிய நிகழ்வு: பாமக



  • கூட்டணி ஆட்சி மந்திரிசபையில் இடம் தேமுதிக உறுதி என வைகோ தகவல்



  • ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் குதித்த சிறுத்தை?



  • மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி



  • ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் எப்ஐஆர்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]