மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி
3/3/2025 2:38:43 PM
கரூர், -கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள 1327 மின்னணு கட்டுப்பாட்டுக்கருவி (கன்ட்ரோல் யூனிட்) முதல்நிலை சரிபார்க்கும் பணி தொடர்பாக பெங்களூர் பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் 3பேர்கொண்ட குழு வந்துள்ளது. கலெக்டர் ராஜேஷ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு கட்டுப்பாட்டு கருவிகளை முதல்நிலை பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் துவக்கப்பட்டது.கலெக்டர் கூறியதாவது:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.மாவட்டத்திற்கு தற்போது 1327 ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் (பேலட் யூனிட்), 1327 கட்டுப்பாட்டு கருவிகளும் (கன்ட்ரோல்யூனிட்) வந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிப்ரவரி 9ம் தேதி முதல் 10 தினங்களாக முதல்நிலை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று முதல் மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் 1327 சரிபார்க்கும்பணிகள் தொடர்ந்து 7 நாட்களுக்கு நடைபெற்று முடிக்கப்படும் என்றார்.