இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

எமெர்ஜென்சி கோட்டா பதிவுக்கு டோல் ப்ரீ எண் 138க்கு பேசுங்கள் - ரயில்வேயில் புதிய நடைமுறை

3/2/2025 2:28:18 PM
ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு 100 பேருக்கு எம்எல்ஏ சீட் தர வாக்குறுதி- ஓபிஎஸ் திட்டத்துக்கு ஜெயலலிதா ‘செக்’ மேலும் பலரின் பதவிக்கு ஆபத்து

நாகர்கோவில், -எமெர்ஜென்சி கோட்டாவில் பதிவு செய்ய புதிய நடைமுறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ரயில்களில் எமெர்ஜென்சி கோட்டாவில் இருக்கைகளை முன்பதிவு செய்ய புதிய நடைமுறைகளை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. தாழ்வான நிலையில் உள்ள படுக்கை வசதியை விரும்புகின்ற முதியோர், கர்ப்பிணிகள், கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு திட்டமிடுகின்ற அரசு பணியாக செல்வோர், உடல்நிலை கோளாறு, நேர்முக தேர்வு போன்றவற்றுக்கு செல்வோர் எமெர்ஜென்சி கோட்டாவில் இருக்கை வசதி கேட்கின்றனர்.

இவர்களுக்கு சில பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை களையும் வகையில் ரயில்வேயால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் எமெர்ஜென்சி கோட்டாவில் இருக்கை பதிவு செய்ய கோட்ட முதுநிலை வணிக மேலாளரை அணுக வேண்டும். பயணத்திற்கு 2 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பதாரர் நேரடியாக அல்லது தனக்கு வேண்டியவர்கள் மூலமாக நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது 0471 2326482 என்ற பேக்ஸ் எண்ணிலோ அல்லது [email protected] என்ற இ-மெயில் முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் கண்டிப்பாக எதற்காக எமெர்ஜென்சி கோட்டாவை கோருகிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் ஒன்றை இணைக்க வேண்டும். நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம், மருத்துவ காரணங்கள் என்றால் மருத்துவரின் மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை இணைக்கலாம்.
 மேலும் ஹெல்ப் லைன் எண் 0471 2326484 காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாட்களில் செயல்பாட்டில் இருக்கும். புகார்களை 138 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • எப்போதும் மக்களோடு இருக்கும் தலைவர் ஸ்டாலின்-கி.வீரமணி



  • 2வது நாளாக நகைக்கடைகள் ஸ்டிரைக்



  • தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் துணை ராணுவம் அனுப்புவது குறித்து உள்துறை அமைச்சர் ஆலோசனை



  • கூட்டணி குறித்து பேச மத்திய அமைச்சர் ஜவடேகர் மீண்டும் சென்னை வருகை- விஜயகாந்த்தை சந்திக்க திட்டம்?



  • தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் திருமணம்



  • 100 பேருக்கு எம்எல்ஏ சீட் தர வாக்குறுதி- ஓபிஎஸ் திட்டத்துக்கு ஜெயலலிதா ‘செக்’ மேலும் பலரின் பதவிக்கு ஆபத்து



  • ஒரு பக்கம் மட்டும் ஜெராக்ஸ் எடுத்ததால் மாணவியின் தலை முடியை கொத்தாக பிய்த்த ஆசிரியர் -வேலூர் அரசு பள்ளியில் கொடூரம்



  • பிரசார கூட்டம் நடக்கும் இடங்களில் மது விற்பனை அதிகரிக்காவிட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை



  • கரூர் நகராட்சி கூட்டத்துக்கு நாமம் இட்டுவந்த திமுக கவுன்சிலர்கள்



  • ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிப்பு



Facebook

Twitter

Shruti Hassan sees release on account
ரிலீஸ் கணக்கு பார்க்கிறார் ஸ்ருதி ஹாசன்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]