இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

3/2/2025 2:04:28 PM
காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி அண்ணன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட கம்யூனிஸ்ட் தொண்டர் குத்திக்கொலை 3 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்

ஊட்டி, -ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன.ஊட்டி, மஞ்சனக்கொரை பகுதியை  சேர்ந்தவர் மனோகரன்(36). கேரட் கழுவும் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இதே பகுதியை சேர்ந்தவர் ஷீலா(26). கணவர்,  குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தார். இவரும் கேரட் கழுவும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.கடந்த 1.11.2025 அன்று கேரட் கழுவும் வேலைக்கு சென்ற போது,  தனது ஆசைக்கு இணங்குமாறு ஷீலாவை, மனோகரன் வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஷீலா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகரன்,  மறுநாள் ஷீலாவின் வீட்டிற்கு சென்று அவர் முகத்தின் மீது ஆசிட் வீசி விட்டு ஓடிவிட்டார். அவரது முகம், கண் மற்றும் உடலில் பல இடங்களில் படுகாயம்  ஏற்பட்டது.

இதுபற்றிய புகாரின் போில் ஊட்டி ஜி1 போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர்.  ஜாமீனில் வெளியே வந்த மனோகரன் வேறு ஒரு  பெண்ணுடன் தலைமறைவானார். முசிறியில் பதுங்கி இருந்த மனோகரனை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு ஊட்டி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இளம்பெண் மீது ஆசிட் வீசிய குற்றத்துக்காக மனோகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை  விதித்து மகளிர் நீதிமன்ற மாவட்ட அமர்வு நீதிபதி சர்வமங்களா தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட ஷீலாவுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

மேலும் சில
  • ஸ்கூட்டரில் ரூ. 1 லட்சம் கொள்ளை



  • மாணவி கடத்தல் வாலிபர் கைது



  • சிறுமியிடம் பலாத்கார முயற்சி சிறுவன் கைது



  • தெலங்கானா கோர்ட் உத்தரவு ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸ் அண்ணனுக்கு ஒரு வருடம் சிறை



  • ஏலச்சீட்டு நடத்தி ரூ. 40 லட்சம் மோசடி எஸ்ஐ மனைவிக்கு வலைவீச்சு



  • ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேர் கைது



  • மர்ம உறுப்பில் கம்பியால் குத்தி வாலிபர் கொடூர கொலை: கொருக்குப்பேட்டையில் பயங்கரம்



  • தமிழகம் முழுவதும் 17,350 ரவுடிகளை வெளியேற்றும் பணி தொடங்கியது : சென்னையில் 3,500 பேர் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்



  • மேலதிகாரிகள் டார்ச்சரால் நர்ஸ் தற்கொலை முயற்சி : மதுரை அரசு மருத்துவமனை முற்றுகை



  • திமுக பிரமுகரை தாக்கி கொலை மிரட்டல் அதிமுக பஞ். தலைவருக்கு வலை



Facebook

Twitter

What happened to Jay? Social psychiatric counseling
ஜெய்க்கு என்ன ஆச்சு? நண்பர்கள் மனநல ஆலோசனை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]