திருப்போரூர் கந்தசாமி கோயிலில் தெப்பல் உற்சவம்
2/23/2016 2:18:56 PM
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான தெப்பல் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், குளத்தின் படிக்கட்டுகளில் நின்று, வெற்றிலையில் கற்பூரம் ஏற்றி நீரில் மிதக்க விட்டு வழிபட்டனர்.அதேபோன்று கேளம்பாக்கம் அடுத்த கொளத்தூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்பல் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் கல்யாண ரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.