இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆப்பூரில் நாளை திமுக மாநாடு : பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி : தா.மோ.அன்பரசன் ஆய்வு

2/20/2016 12:25:09 PM
சேலம் கல்லூரியில் ராகிங் கொடுமை -2வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி:ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை மூன்று நாள் விசாரணைக்கு பின் எழும்பூர் கோர்ட்டில் ராம்குமார் இன்று ஆஜர்

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆப்பூரில் திமுக மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கர் பரப்பளவிலான பந்தல் அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஆப்பூரில் திமுக சார்பில் உறுதி முழக்க பேரணி, பொதுக்கூட்டம் நாளை மதியம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகிக்கிறார். தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் முன்னிலை வகிக்கிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இதில், முதன்மை செயலாளர் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, ஜெ.அன்பழகன், கி.வேணு, மா.சுப்பிரமணியன், எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த 10 நாட்களாக ஆப்பூரில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநாட்டு பந்தல் 150 அடி அகலத்தில் 40 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டு பந்தலில் 300 ஏக்கர் பரப்பளவிலான இடம் கட்சி நிர்வாகிகள் அமர்வதற்கும், 200 ஏக்கர் பரப்பளவிலான இடம் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 இங்கு நமக்கு நாமே விடியல் மீட்பு பிரசார நிறைவு கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சி வடக்கு மாவட்டத்தின் சார்பில் 2 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருகை தரும், மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக கிண்டி கத்திப்பாராவில் இருந்து மாநாட்டு திடல் வரை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. 25 சதவீதம் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அவருடன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவருமான வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம், செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், செங்கல்பட்டு நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன், ஒன்றிய செயலாளர் மனோகரன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் தர்மன், நகர இளைஞரணி செயலாளர் டி.கே.கமல், வினோத், பரணி, ஆல்பர்ட், செங்கல்பட்டு இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் சில
  • சேலம் கல்லூரியில் ராகிங் கொடுமை -2வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி:ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை



  • சேலம் கல்லூரியில் ராகிங் கொடுமை2வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சி- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை



  • சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டது தமிழகத்தில் மக்கள் பயத்தில் வாழ்கின்றனர் - குஷ்பு பேட்டி



  • ரயில்வே சர்வர் பழுது - டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் கடும் அவதி



  • மானாம்பதி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐ போலீஸ்காரர் பைக் எரிப்பு



  • டெல்லியில் நடக்கும் முதல்வர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொள்ள வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்



  • முட்டுக்காடு படகு துறையை ஆய்வு செய்யும்போது ஆசிய வளர்ச்சி வங்கி குழு தலைவர் மரணம்



  • செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் இன்று திறப்பு



  • அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவர் கொலை- போனில் பேசிய நபர்களிடம் தனிப்படை தீவிர விசாரணை



  • வேலை வாங்கி தருவதாக வக்கீல் ஏமாற்றியதால் ஐகோர்ட்டில் ஆசிரியர் தீக்குளிக்க முயற்சி



Facebook

Twitter

Love-duet-free film in Malaysia
மலேசியாவில் காதல்-டூயட் இல்லாத படம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]