கவரப்பேட்டை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய அளவில் விருது
12/19/2015 12:17:50 PM
திருவள்ளூர்: அகில இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு இணைந்து, அகில இந்திய அளவில் நடத்திய 2015ம் ஆண்டிற்கான ஆய்வில், கவரப்பேட்டை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி முதலாவதாக தேர்வு செய்யப்பட்டு, ‘மின்னணுவியல் மற்றும் அதை சார்ந்த துறைகளில் தொழில் நிறுவனங்களுடன் இணைந்த சிறந்த பொறியியல் கல்லூரி’ என்ற விருதினை பெற்றுள்ளது.இதற்கான விருது வழங்கும் விழா புது டெல்லியில் இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பு நடத்திய உலகளாவிய உயர்கல்வி மாநாட்டில் நடந்தது.
இந்த விருதினை, அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே வழங்க, அதனை ஆர்.எம்.கே. கல்வி நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர் பெற்று கொண்டார்.அதே ஆய்வில், கல்லூரியில் உள்ள இயந்திரவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் தொழில் நிறுவனங்களுடன் இணைந்த கல்லூரிகளில், இந்திய அளவில் சிறந்த 5 கல்லூரிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த விருதை பெற்றதற்காக, ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், முதல்வர், துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களை பாராட்டினார்.