இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அதிகாரிகள் துணையுடன் குமரி மாவட்டத்தில் கனிமம் கொள்ளை : பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

11/30/2015 2:24:53 PM
வங்கக் கடலில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம்: அசம்பாவிதங்களை தடுக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுக்கடை: குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே தண்டுமணி பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.  இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பாறை உடைத்துவந்தார். கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மற்ற 4 பேர் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து அனுமதியின்றி பாறை உடைப்பதாகசம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கும் தெரியவந்தது.இதையடுத்து அப்போதைய  விளவங்கோடு தாசில்தார் லீலாபாய் சம்பவ இடம் சென்று விசாரித்ததில் அனுமதியின்றி பாறை உடைப்பதை கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறையினர் தணிக்கை செய்தனர். இதுசம்பந்தமாக புதுக்கடை போலீசில் சம்பந்தபட்ட நபர்கள் மீது புகார் அளித்தனர்.

இதன்பிறகு பத்மனாபபுரம் கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதில் அனுமதியின்றி அரசு நிலத்தில் இருந்து பாறை உடைத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பாறை உடைத்ததாக ரவிசந்திரனுக்கு 4 கோடியே 24 லட்சத்து 16 ஆயிரத்து 730  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டன.இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் அந்த பகுதியில் இருந்து பாறை உடைத்து கடத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார்  கூறியதாவது:   இதுபோன்ற பகுதிகளில் வருவாய் துறையினர் பக்கத்தில் உள்ள பட்டா நிலத்திற்கு அனுமதி வழங்கிவிட்டு அரசு நிலத்தில் பாறை உடைக்க வைக்கின்றனர்.

இது சம்பந்தமாக  புகார் அளித்தாலும் கண்டு கொள்வதில்லை. வருவாய்துறை,  கனிம வளத்துறை, வனத்துறை, காவல் துறையில் உள்ள சிலர் முழுமையாக உதவி செய்கின்றனர். குற்றம் சாட்டப்படும் பகுதியில் சென்று ஆய்வு நடத்துவது போல் நடித்து குறைந்த அளவு அபராதம் விதித்து, கோர்ட்டில் சமர்ப்பிக்கின்றனர். ஆனால்  அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி எந்த ஆவணங்களையும் சமர்ப்பிப்பதில்லை. இதனால் வழக்கு,  குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக முடியும் நிலை ஏற்படும். அதன் பிறகு மீண்டும் பழைய முறையில் லஞ்சம் கொடுத்து பாறை உடைக்கும் பணியை தொடர்கின்றனர். இது குமரி மாவட்டத்தில் பெரும் பான்மை இடங்களில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு சதீஷ்குமார் கூறினார்.முள்ளூர்துறை, ராமன்துறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:அரபி கடலின் அருகே 300 மீட்டர் தொலைவில் 500 மீட்டர் உயரத்தில் இந்த பாறை அமைந்துள்ளது. அரசு உத்தரவின்படி பாறை உடைக்கும் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் எந்த குடியிருப்புகளோ, வழிபாட்டு தலங்களோ, பள்ளிகளோ இருக்க கூடாது. ஆனால் தண்டுமணியில் பாறைக்கு மிக அருகில் 100 மீட்டர் தொலைவில் தர்மசாஸ்தா கோவில் உள்ளது.இன்னும் சில ஆண்டுகளில் தண்டுமணி பாறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இதற்கு உடந்தையாக உள்ள அனைவரையும் விசாரிக்கவேண்டும். இதற்கு சகாயம் ஐஏஎஸ் போன்ற அதிகாரிகளை நியமித்து விசாரிக்கவேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • வங்கக் கடலில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்



  • வருமானத்திற்கு அதிகமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொத்து குவித்ததாக புகார் எதிரொலி: அதிமுக மாஜி அமைச்சரின் 21 இடங்களில் ரெய்டு..!



  • மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்: 3வது வழக்கில் சிவசங்கர் பாபா கைதாகிறார்



  • முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 மாவட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்: அதிமுக உள்ளிட்ட மாற்றுகட்சியினரும் ஐக்கியம்



  • கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், சமூக இடைவெளியுடன் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்



  • தங்கம் விலையில் அதிரடி மாற்றம்: பவுன் ரூ256 உயர்வு



  • 84 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; ரூ29 ஆயிரம் கோடியில் 49 ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது



  • கொரோனா பாதிப்பால் தேர்வு ரத்தான நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி: பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார்



  • நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க கோரி ஜனாதிபதியை சந்திக்க மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி பயணம்: மேகதாது பிரச்னை குறித்தும் புகார் அளிக்க திட்டம்



  • கேளம்பாக்கம் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வழக்கு சிவசங்கர் பாபா பள்ளியின் 5 ஆசிரியைகள் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓட்டம்: வீட்டு கதவில் சம்மன் ஒட்டினர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]