ஆந்திரா வங்கியில் 200 புரொபஷனரி ஆபீசர்ஸ்
11/30/2015 2:15:52 PM
ஐதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆந்திரா வங்கியில் காலியாக உள்ள 200 புரொபஷனரி ஆபீசர்ஸ் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Probationary Officer: 200 இடங்கள் (பொது-101, ஒபிசி-54, எஸ்சி-30, எஸ்டி-15). சம்பளம்: ரூ.23,700-42,020. வயது வரம்பு: 1.9.2025 அன்று 20 முதல் 28க்குள். அதிகபட்ச வயதுவரம்பில் எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஏற்ப தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் ஆந்திரா வங்கியின் சார்பாக மணிபால் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஒரு வருட முதுநிலை டிப்ளமோ படிப்புக்கு (Banking & Finance) அனுப்பப்படுவர். அதில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் நிரந்தர பணி வழங்கப்படும்.
எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் நடைபெறும். விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.600/- (எஸ்சி.,எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100). இதை டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங் முறையில் ஆன்லைனில் மட்டும் செலுத்தவும். www.andhrabank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 27.12.2015. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2015.