இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நாளை திறப்புக்கு தனியார் பள்ளிகள் ரெடி; அரசு பள்ளிகள் தயக்கம்

11/25/2015 3:03:47 PM
தடையை மீறி 50 கிராம மக்கள் தரைபாலத்தை கடந்ததால் பதற்றம் : போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மீண்டும் நாளை முதல் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

பூந்தமல்லி: தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி  கல்லூரிகளுக்கு அரசு தொடர் விடுமுறை அறிவித்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கடந்த 8ம் தேதியில் இருந்து  இன்று (நவ.25) வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும், இன்றும் மூன்று மாவட்டங்களிலும் மழை குறைந்து வெயில்  தலைகாட்ட துவங்கியுள்ளது. பள்ளி கல்லூரிகள் நாளையோ அல்லது நாளை மறுநாளோ துவங்குவதற்கு அரசு உத்தரவிடலாம் என்ற நிலையில் அரசு மற்றும்  தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், இயங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அரசு கல்வித்துறை வாயிலாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மின்சார இணைப்புகளை சரிபார்த்தல், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில்  தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல், பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றி சுத்தம் செய்தல் உள்ளிட்ட  மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த 8க்கும் மேற்பட்ட அறிவுரைகளை வழங்கி பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்றுவரை பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று 3 மாவட்டத்திலும் உத்தரவு வராத நிலையில், நீண்ட இந்த விடுமுறை  நாட்களை ஈடு செய்வதற்காக நாளொன்றுக்கு 9 பீரியடுகளாக உள்ளதை 11 பீரியட்களாக மாற்றி ஒவ்வொரு நாளும் பள்ளிநேரத்தை கூடுதலாக ஒன்றரை  மணிநேரம் நடத்துவதற்கான புதிய பாட நேர அட்டவணையை தயார் செய்யும் பணியில் தனியார் பள்ளிகள் மும்முரமாக உள்ளன.

 மேலும் மொழிப்பாடப்பிரிவை தவிர்த்து கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் கூடுதல் நேரம் செலவு செய்து மாணவர்களுக்கு  கற்பிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளுக்கு தேவையான போதிய நிதி அவர்களிடம் இருப்பதாலும் செலவு செய்து கொள்ளும் உரிமை  அவர்களுக்கு உள்ளதாலும் இந்த 2 நாட்களிலேயே 90 சதவீதம் தனியார் பள்ளிகள் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் இயங்குவதற்கு பள்ளி வளாகத்தின் உள்  வசதிகளை சிறப்புற செய்துவிட்டனர்.

ஆனால் அரசு பள்ளிகளுக்கு போதுமான நிதி ஆதாரம் இல்லாமையால் 3 மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு அறிவுறுத்திய 8 க்கும் மேற்பட்ட  அறிவுரைகளை பின்பற்றவும் பள்ளிகள் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இயங்குவதற்கும் போதுமான நிதியை பெற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்  பெற்றோர்களிடம் உதவிகள் பெற்று செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அரசு கல்வித்துறை இதற்காக எந்த நிதியும் இதுவரை ஒதுக்கீடு செய்யாததால் அரசு  பள்ளிகள் தனியாரிடம் கைவிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் நாளையோ நாளை மறுநாளோ திறக்கப்பட்டால் பாதுகாப்பான குடிநீரை கூட  மாணவர்களுக்கு வழங்க இயலாத நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் குறைகூறுகின்றனர். இதனால் அரசு பள்ளிகள் நாளை திறப்பதற்கு வாய்ப்பு குறைவு என  கூறப்படுகிறது.

மேலும் சில
  • காதல் கணவனுக்கு தந்தை மிரட்டல் : அதிமுக கவுன்சிலர் மகள் காதலனுடன் தஞ்சம்



  • காதல் தகராறில் கார் சேஸிங் மரத்தில் கார் மோதி 2 வாலிபர்கள் பலி



  • மாநகராட்சி ஊழியர்களின் அலட்சியத்தால் மயிலை சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளம்



  • தமிழகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் : ஜி.கே. வாசன் வலியுறுத்தல்



  • மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை ஜெயலலிதா முதல்வராக இருப்பதே வேஸ்ட் விஜயகாந்த் அதிரடி



  • வெள்ள நிவாரணத்தில் 25 சதவீதம் கமிஷன் : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • முதல்வர் ஜெயலலிதா பற்றி கட்டுரை வெளியிட்ட வார இதழ் பேஸ்புக் முடக்கம் : தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்



  • ஜனநாயக உரிமையை காலில் போட்டு ஜெயலலிதா அரசு மிதிக்கிறது : வைகோ குற்றச்சாட்டு



  • வர்த்தக காங்கிரஸ் தலைவர் எம்.எஸ். திரவியம் இளங்கோவனிடம் வாழ்த்து



  • ஆலந்தூர் மண்டல அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த தேமுதிகவினரை அதிமுகவினர் விரட்டி விரட்டி தாக்குதல்



Facebook

Twitter

இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் அமலா பால்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]