இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மைனர் பெண்ணிடம் உல்லாசம் திருமணத்துக்கு மறுத்த மதபோதகர் கைது

10/15/2015 2:34:41 PM
ஸ்ரீ,ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு - பக்தர்கள் குவிகின்றனர் இலங்கை சிறையில் விடுவிக்கப்பட்ட 51 மீனவர்கள் நாளை காரைக்கால் வருகை

திருப்பத்தூர்: திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி  மைனர் பெண்ணிடம் உல்லாசம் இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த மத போதகரை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17வயது பெண். இவர் மிட்டூரில் உள்ள அரசு பெண்கள் பள்ளி விடுதியில் தங்கிருந்து பிளஸ்1 படித்து வந்தார். மாணவி மிட்டூரில் உள்ள ஒரு சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.அப்போது அந்த மாணவியுடன் அந்த சர்ச்சில் மத போதகராக இருக்கும்  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அப்துல்லாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (எ) தீபக்குமார்( 47) என்பவர் நட்புடன் பழகி வந்தாராம். மேலும் அந்த பெண்ணை அவர் சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணின் தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தனது படிப்பை நிறுத்தி விட்டு தாயை கவனிக்க ஊருக்கு சென்று விட்டாராம். மேலும் தனது தாய்க்கு ஜெபம் செய்ய வரும்படி மதபோதகர் விஜயகுமாரை அப்பெண் அழைத்துள்ளார்.அதன்படி விஜயகுமார் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று ஜெபம் செய்து வந்தாராம். அப்போது, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என விஜயகுமார் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி மைனர்பெண்ணை சென்னைக்கு அழைத்துச்சென்ற விஜயகுமார், அங்கு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மைனர்பெண் விஜயகுமாரிடம் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த விஜயகுமார், இதுகுறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த மைனர்பெண், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து மதபோதகர் விஜயகுமாரை கைது செய்தார். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் சில
  • 2 மூதாட்டிகள் கொலை - வாலிபருக்கு வாழ்நாள் சிறை



  • இலவச வேட்டி, சேலைகளை திருடி விற்ற துணை தாசில்தார் கைது



  • மும்பை நகை வியாபாரியை கடத்தி ரூ.40 லட்சம் பறித்த 3 போலீஸ் கைது



  • முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை - மேலும் 2 பேருக்கு குண்டாஸ்



  • திருமணம் செய்து கொள்வதாக உல்லாசம் - இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் கைது



  • துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சத்தீஸ்கர் நிதி நிறுவனத்தில் 13 கிலோ தங்கம் கொள்ளை



  • குடும்ப தகராறில் ஆத்திரம் போலீஸ் ஏட்டு மீது மனைவி ஆசிட் வீச்சு



  • நகை கடை உரிமையாளரிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது



  • பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி - சென்னை இளம்பெண் கதறல்



  • இளம்பெண் கொலை வழக்கில் வியாபாரி கைது - 7 மாதத்திற்கு பின் துப்பு துலங்கியது



Facebook

Twitter

ஜாக்கிசானுக்கு விருந்து தருகிறார் தமிழ் நடிகை
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]