இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

விஷால் ரெட்டி, கார்த்தியை யாரோ தூண்டி விடுகிறார்கள் : ராதிகா சரத்குமார் பகீர் புகார் : ஒருமையில் பேசிய சிம்பு

10/8/2025 3:42:45 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

சென்னை: சரத்குமார் அணி சார்பில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் ராதிகா சரத்குமார்.  அப்போது அவர் கூறியதாவது:இங்கு சரத்குமார் மனைவியாகப் பேசவில்லை. நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் பேசுகிறேன். இப்போது நடக்க உள்ள தேர்தல் பற்றி  நினைத்தால் வெட்கமாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது. நடிகர் சங்கம் சம்பந்தமாக, முதலில் அந்த அணியினர் கையெழுத்து வேட்டை ஆரம்பித்தார்கள்.  கார்த்தியிடமும், நாசரிடமும் இது பற்றி கேட்டேன். பிறகு கமல்ஹாசனிடமும் சரத்குமார் கேட்டார். ஆனால், முதல் கையெழுத்து கமல் போட்டார். நடிகர் சங்கம்  பற்றி யார், என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அந்த அணியினர் என் குடும்பத்தைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள். சில வாரங்களுக்கு  முன்பு விஷாலிடம் பேசினேன். நடிகர் சங்க விவகாரத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னேன். பிறகு சிவகுமாரிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன்.  இதையடுத்து கமலிடம் பேசினேன். இப்படி எல்லாம் பேசுவது அசிங்கமாக இருக்கிறது என்றேன்.


இது பற்றி ‘நாசரிடம் நீங்கள் பேசுங்களேன்’ என்று சொன்னேன். ‘நான் இந்த விஷயத்துக்குள் வர விரும்பவில்லை’ என்று கமல் சொன்னார். என் கணவர்  சரத்குமார் பற்றி தொடர்ந்து அசிங்கமாகப் பேசுகிறார்கள். விஷால் யாரையும் பொருட்படுத்தாமல், யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். விஷால்  ரெட்டியையும் கார்த்தியையும் யாரோ பின்னணியில் இருந்து தூண்டி விடுகிறார்கள். சரத்குமார், ராதா ரவி இருவரும் மீண்டும் தேர்தலில் நிற்போம் என்று சொன்  னார்களா? அவர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார்களே, அதற்கு ஆதாரம் இருக்கிறதா? தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். தயவு செய்து நடிகர்  சங்கத்தின் ஒற்றுமையை உடைக்காதீர்கள். இவ்வாறு ராதிகா பேசினார்.

ஒருமையில் பேசிய சிம்புசிம்பு பேசும்போது விஷால் அணியினரை அவன் இவன் என்று கூறினார். அவர் கூறும்போது, ‘இன்றைக்கு யாரோ வந்து என் சினிமா  குடும்பத்தை உடைக்க நினைக்கிறார்கள். நடிகர் சங்கம் பக்கம் வராதவர்கள் எல்லாம் இன்று கேள்வி கேட்கிறார்கள். கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதை  இருக்கிறது? குடும்பமாக இருந்த நடிகர் சங்கத்தை விஷால் பிரித்து விட்டார். நல்லவர்கள் கையில் இந்த சங்கம் இருக்க வேண்டும். அதனால் தயவு செய்து  எங்கள் பக்கம் எல்லாரும் வாருங்கள். வரும் 11ம் தேதி நடக்கும் கூட்டத்தில் எங்களது பலத்தை நிரூபிக்கிறோம். சங்க ஒற்றுமைக்காக தேர்தலில் இருந்து எங்கள்  அணியினர் வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறோம்’ என்றார்.கே. பாக்யராஜ், பூர்ணிமா, ஊர்வசி, மோகன்ராம் உடனிருந்தனர்.

மேலும் சில
  • பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி



  • லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்



  • மழையால் வேகமாக பரவும் சின்னம்மை நோய்; மக்கள் பீதி: சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு உத்தரவு



  • நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மக்கள் வரவேற்பால் ஆளுங்கட்சி கலக்கம்: திருப்பூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி : இளங்கோவன் தாக்கு



  • திருத்தணியில் இன்று பிஎஸ்என்எல் செல்போன் சேவை முடக்கம்: வர்த்தகம், வங்கிகள் பாதிப்பு



  • நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பு: விஷால் அணி வெளியூர்களில் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பு



  • ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • இருவேறு விபத்து பெண் உட்பட 3 பேர் பலி



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]