இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அயனாவரத்தில் பட்டம் விடுதல் தீமை குறித்து கருத்தரங்கு மாணவர்கள் உறுதிமொழி

10/8/2025 3:39:15 PM
‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு சீன ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அபாரம்

கீழ்ப்பாக்கம்: சென்னை நகரில் பட்டம் பறக்க விடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டு உள்ளது. அதையும் மீறி ஒருசிலர் பட்டம் பறக்க விடுவதால், பள்ளி  மாணவ-மாணவிகள், குழந்தைகள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் என பலரும் உயிரிழந்து வருகின்றனர்.சமீபத்தில்கூட, பெரம்பூர் மேம்பாலத்தில்  குடும்பத்தினருடன் சென்ற 5 வயது சிறுவன் ஒருவன், மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக பலியானான்.அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்,  வடசென்னை பகுதியில் பட்டம் பறக்க விட்ட அதிமுக பிரமுகரின் மகனை கைது செய்ய போன போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தை அறிய  முடிந்தது.‘தமிழக அரசின் தடை உத்தரவை மீறி யாரும் பட்டம் பறக்க விடக்கூடாது’ என்று போலீசார் பலமுறை அறிவுறுத்தினாலும், யாரும் அதைப் பற்றி  காதில் போட்டுக் கொள்வது இல்லை.

இந்நிலையில், பட்டம் பறக்க விடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அயனாவரம் போலீஸ்  நிலைய வளாகத்தில் நேற்று மாலை கருத்தரங்கு நடைபெற்றது.இதில், அயனாவரம் கல்கி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த 3  ஆயிரம் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.இக்கருத்தரங்கின்போது, பட்டம் பறக்க விடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அயனாவரம்  போலீஸ் அதிகாரிகள் யுவராஜ், சங்கர் ஆகியோர் விளக்கி பேசினார்கள்.இதைத் தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ-மாணவியர், ‘இனி நாங்கள் பட்டம்  பறக்க விட மாட்டோம். மேலும் பட்டம் விற்பனை செய்பவர்கள், மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள், காற்றாடி விடுபவர்கள் குறித்து போலீசாருக்குத் தகவல்  தெரிவிப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இக்கருத்தரங்கில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி : இளங்கோவன் தாக்கு



  • திருத்தணியில் இன்று பிஎஸ்என்எல் செல்போன் சேவை முடக்கம்: வர்த்தகம், வங்கிகள் பாதிப்பு



  • நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பு: விஷால் அணி வெளியூர்களில் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பு



  • ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • இருவேறு விபத்து பெண் உட்பட 3 பேர் பலி



  • ராஜராஜசோழனின் 1030வது சதய விழா தஞ்சையில் 22, 23ம் தேதி நடக்கிறது



  • நீதிமன்றத்தின் தூண்கள் வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு



  • ஈரோட்டில் மஞ்சள் மேம்பாட்டு வாரியம் மத்திய அமைச்சர் தகவல்



  • தஞ்சையில் நாளை மமக பொதுக்குழு ஜவாஹிருல்லா பங்கேற்க தமீமுன் அன்சாரி அழைப்பு



  • மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு : வைகோ பேச்சு



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]