இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வளசரவாக்கத்தில் சினிமா டான்ஸ் மாஸ்டர் வீட்டில் கஞ்சா செடிகள் உறவினர் தலைமறைவு

10/8/2025 3:38:37 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

பூந்தமல்லி: சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வள்ளியம்மை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பிரபல சினிமா நடன இயக்குநர் லலிதா  மணி (48). இவருக்கு அங்கு 2 அடுக்கு குடியிருப்பு உள்ளது.அதில், தரைதளத்தில் லலிதாமணி தங்கியிருக்கிறார். முதல் மற்றும் 2-ம் தளத்தில் குறும்பட  இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சினிமா துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.இரண்டாவது தளத்தின் மொட்டை  மாடியில் லலிதாமணி செடிகள் வளர்த்து வருகிறார். இச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகளை வளர்ப்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல்  வந்தது.இதைத் தொடர்ந்து, லலிதாமணி வீட்டுக்கு நேற்றிரவு வளசரவாக்கம் போலீசார் சென்று, மொட்டை மாடியில் சோதனை போட்டனர். அங்கு ஒரு பெரிய  தொட்டியில் பயிரிடப்பட்டு இருந்த 4 முதல் 5 அடி உயரமுள்ள 5 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

சென்னை நகரின் மையப் பகுதியில், சினிமா நடன இயக்குநர் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லலிதாமணியிடம் விசாரித்தனர். ‘நான் 2 மாடிகளையும் வாடகைக்கு விட்டிருக்கிறேன். நான்  மொட்டை மாடிக்கும் செல்வதில்லை. கஞ்சா செடிகளையும் வளர்க்கவில்லை’ என்று லலிதாமணி கூறினார்.இதைத் தொடர்ந்து அங்கு வாடகைக்கு  குடியிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, ‘நாங்கள் இங்கு வாடகைக்கு குடியிருக்கிறோம். நாங்கள் செடிகளை வளர்க்க முடியாது. லலிதாமணியின்  உறவினர் அபிஷேக் (30) என்பவருக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர்தான் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்திருக்கிறார். அவர்  வீட்டு உரிமையாளரின் சொந்தக்காரர் என்பதால், அவரை நாங்கள் எதுவும் கேட்கவில்லை’ என்று கூறினர்.இந்நிலையில், லலிதாமணியின் வீட்டு மொட்டை  மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்த அபிஷேக், போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் சில
  • திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளையில் இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது



  • திமுக கவுன்சிலர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது



  • குரோம்பேட்டையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை



  • பெங்களூர் விடுதியில் வைத்து மிரட்டல்: தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பறிப்பு : பெண் உள்பட 5 பேர் கைது



  • கல்பாக்கம் அருகே அதிகாலை சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி : டிரைவர் கைது; மணமகள் வீட்டார் அதிர்ச்சி



  • சிறுமியை சீரழித்த செக்ஸ் ஏடிஜிபி பற்றி எஸ்.ஐ.யிடம் விசாரணை: பலாத்கார வழக்கு சூடு பிடிக்கிறது



  • அம்பத்தூர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை



  • டாஸ்மாக் கடை முன்பு நின்ற மச்சானை தட்டி கேட்டவருக்கு சரமாரி பீர் பாட்டில் குத்து



  • வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு மின்வாரிய ஊழியர் வீடு உடைத்து 12 பவுன் நகை, பைக் கொள்ளை: மேலும் 2 இடத்தில் கைவரிசை



  • கணவனின் குடிப்பழக்கத்தால் வந்த சோதனை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி இரண்டு குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]