இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும் : அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

10/8/2025 3:35:39 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை கடந்த 30ம் தேதி அரசு அறிவித்தது. ஆனால்,  அதன்பின் ஒருவாரம் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. சில  இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்  அமைக்கப்பட்ட போதிலும் அவற்றில் நேரடி நெல் கொள்முதல் இன்னும் முறைப்படி தொடங்கவில்லை.  குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தங்களின் விளைபொருளை விற்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்றால் பல்வேறு காரணங்களைக் கூறி  திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு வழங்குவதற்கான பணம் இல்லை என்று காரணங்கள் கூறப்படுவதாக உழவர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர். நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காட்டப்படும் அலட்சியம் காரணமாக  கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி  வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த திங்கள்கிழமை பெய்த மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிவிட்டன. முளை விட்ட நெல்லை விற்பனை  செய்ய முடியாது என்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில், குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி அவற்றை  கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகக் கூறப்படுகிறது. 18 விழுக்காட்டிற்கும் குறைவான ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும்  என்று அதிகாரிகள் கூறிவிட்டதால் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இன்னும் பல விவசாயிகள்  வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் நெல் மூட்டைகளை விற்கும் கொடுமையும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களைத் திறந்த தமிழக அரசு, அவற்றில் நெல் கொள்முதலை தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின்  நிலைமையை புரிந்து கொண்டு நெல் கொள்முதலை தீவிரப் படுத்துவதுடன், 21 சதவீதம் வரை ஈரப்பதமுள்ளநெல்லையும் கொள்முதல் செய்ய ஆணையிட  வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்



  • மழையால் வேகமாக பரவும் சின்னம்மை நோய்; மக்கள் பீதி: சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு உத்தரவு



  • நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மக்கள் வரவேற்பால் ஆளுங்கட்சி கலக்கம்: திருப்பூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி : இளங்கோவன் தாக்கு



  • திருத்தணியில் இன்று பிஎஸ்என்எல் செல்போன் சேவை முடக்கம்: வர்த்தகம், வங்கிகள் பாதிப்பு



  • நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பு: விஷால் அணி வெளியூர்களில் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பு



  • ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • இருவேறு விபத்து பெண் உட்பட 3 பேர் பலி



  • ராஜராஜசோழனின் 1030வது சதய விழா தஞ்சையில் 22, 23ம் தேதி நடக்கிறது



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]