இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வாள்வீச்சு வீராங்கனைக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி ஜெயலலிதா அறிவிப்பு

10/8/2025 3:33:21 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி,  2014ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதோடு, இந்த  ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.  இது மட்டுமின்றி காமன்வெல்த்  ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது பவானி தேவி, 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்  போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், பவானி தேவி  இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள  நிதியுதவி வழங்கிட வேண்டுமென்று  எனக்கு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார். அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்று இம்மாதம் வெனிசுவேலா  மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் பவானி தேவி  கலந்து கொள்வதற்கு ஏதுவாக  தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக 3 லட்சம்  ரூபாய்  நிதியுதவி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும், பவானி தேவி, வெனிசுவேலா  மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைவெல்ல எனது வாழ்த்துகளை தெரிவித்துக்  கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில
  • லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்



  • மழையால் வேகமாக பரவும் சின்னம்மை நோய்; மக்கள் பீதி: சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு உத்தரவு



  • நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மக்கள் வரவேற்பால் ஆளுங்கட்சி கலக்கம்: திருப்பூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி : இளங்கோவன் தாக்கு



  • திருத்தணியில் இன்று பிஎஸ்என்எல் செல்போன் சேவை முடக்கம்: வர்த்தகம், வங்கிகள் பாதிப்பு



  • நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பு: விஷால் அணி வெளியூர்களில் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பு



  • ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • இருவேறு விபத்து பெண் உட்பட 3 பேர் பலி



  • ராஜராஜசோழனின் 1030வது சதய விழா தஞ்சையில் 22, 23ம் தேதி நடக்கிறது



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]