வரும் 11ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் : சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
10/8/2025 3:32:55 PM
சென்னை: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், வரும் ஜனவரி 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, 2016ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் வரும் ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (அதாவது 01.01.1998ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம்-6ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம்-7ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம்-8ஐ பூர்த்தி செய்தும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-8 ஏ யினை பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் வாக்காளர் பதிவு அலுவலர் / சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக கடந்த 20.9.2025 மற்றும் 4.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கடந்த இரண்டு முகாமின் மூலம் 63,212 மனுக்கள் பெறப்பட்டன. வாக்காளர்களின் வசதிக்காக மேலும் ஒரு சிறப்பு முகாம் வரும் 11.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடைபெற உள்ளது. , மேற்படி முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவைகளை மேற்கொண்டு பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.