இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மாற்றுத்திறனாளி சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை 40 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

10/8/2025 2:24:33 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை நேற்று கிருஷ்ணகிரி அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கீழ்கொச்சாவூரைச் சேர்ந்தவர் வீரபத்திரப்பா. இவரது வாய் பேச முடியாத மாற்றுதிறனாளியான 16 வயது மகளை, கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து சிறுமியின் தந்தை தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.ஆனால் முதலில் அவரது புகாரை போலீசார் ஏற்க மறுத்தனர்.

 பின்னர் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தலையீட்டால், வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் சிறுமியின் தந்தை, இந்த வழக்கில் தேன்கனிக்கோட்டை போலீசார் முறையாக விசாரிக்காததால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது.அதன்படி சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று சிபிசிஐடி டிஎஸ்பி பிரபாகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்.ஐ. கலைவாணி ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது குடும்பத்துடன் வசித்து வரும் தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுகோட்டைக்கு சென்று அங்கு விசாரணை செய்துள்ளனர்.பின்னர் சம்பவம் நடத்த இடத்திற்கு அந்த சிறுமி மற்றும் அவரது பெற்றோரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இன்று இரண்டாம் நாளாக இந்த சம்பவம் குறித்து 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில
  • திருச்சியில் ரூ.10 லட்சம் கொள்ளையில் இன்ஜினியர் உள்பட 5 பேர் கைது



  • திமுக கவுன்சிலர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது



  • குரோம்பேட்டையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை



  • பெங்களூர் விடுதியில் வைத்து மிரட்டல்: தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கில் பறிப்பு : பெண் உள்பட 5 பேர் கைது



  • கல்பாக்கம் அருகே அதிகாலை சோகம் பைக் மீது அரசு பஸ் மோதி புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி : டிரைவர் கைது; மணமகள் வீட்டார் அதிர்ச்சி



  • சிறுமியை சீரழித்த செக்ஸ் ஏடிஜிபி பற்றி எஸ்.ஐ.யிடம் விசாரணை: பலாத்கார வழக்கு சூடு பிடிக்கிறது



  • அம்பத்தூர் அருகே மர்ம நபர்கள் கைவரிசை



  • டாஸ்மாக் கடை முன்பு நின்ற மச்சானை தட்டி கேட்டவருக்கு சரமாரி பீர் பாட்டில் குத்து



  • வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு மின்வாரிய ஊழியர் வீடு உடைத்து 12 பவுன் நகை, பைக் கொள்ளை: மேலும் 2 இடத்தில் கைவரிசை



  • கணவனின் குடிப்பழக்கத்தால் வந்த சோதனை பாவாடை நாடாவால் கழுத்தை இறுக்கி இரண்டு குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]