இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பீகாரில் பிரதமர் மோடி பிரசாரம் : 4 இடங்களில் பேசுகிறார்

10/8/2025 2:22:23 PM
நாக்கில் சைத்தான் குடியிருக்கிறது என பேசியதற்கு பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மோடி மீது லாலு பாய்ச்சல் சுஷ்மா நாளை மாலத்தீவு பயணம்

பாட்னா: பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். 4 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதையொட்டி, கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதள தலைமையிலான கூட்டணிக்கும், பாஜ தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள கூட்டணியில், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாஜ தலைமையிலான கூட்டணியில், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை உள்ளன.ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் நிதீஷ்குமார் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இவரது கூட்டணியில் உள்ள லாலு பிரசாத் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தமுறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜ செயல்பட்டு வருகிறது. இதற்காக பாஜவின் முக்கிய தலைவர்கள் பீகாரில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், பிரதமர் மோடியும் பீகார் தேர்தலில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். பாஜவுக்கு பலம் சேர்க்கும் வகையில் ஏற்கனவே பிரசார கூட்டங்களில் பேசியுள்ளார்.பிரதமர் மோடியை முன்னிலைப்படுத்தி பாஜவினர் இந்த தேர்தலை சந்திக்கின்றனர். எனவே, தேர்தல் நெருங்கும் நிலையில், அதிக பொதுக்கூட்டங்களில் பிரதமர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்தவகையில், பிரதமர் மோடி இன்று முங்கர், சமஸ்திபூர், நவாடா, பெகுசரய் ஆகிய 4 இடங்களில் உரையாறுகிறார். நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களிலும் மோடி பங்கேற்கிறார். நாளை மறுநாளும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. தேர்தல் வரும் 12ம் தேதி தொடங்கி, நவம்பர் 5ம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடக்கிறது. வாக்குகள் நவம்பர் 8ம் தேதி எண்ணப்படுகின்றன.

மேலும் சில
  • கர்நாடகாவில் அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33%



  • நாக்கில் சைத்தான் குடியிருக்கிறது என பேசியதற்கு பீகார் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: மோடி மீது லாலு பாய்ச்சல்



  • சுஷ்மா நாளை மாலத்தீவு பயணம்



  • திருப்பதி கோயிலில் வரும் 14ம் தேதி நவராத்திரி பிரமோற்சவம் துவக்கம்: ஆர்ஜித சேவைகள் ரத்து



  • இந்திய விமானப் படை



  • திகார் சிறையில் கைதிகள் பயங்கர மோதல் 2 பேர் பலி, அதிகாரி உள்பட 6 பேர் காயம்



  • சட்டீஸ்கர் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட்கள் பலி : பாதுகாப்பு படையினர் அதிரடி



  • உள்நாட்டு போர் விமானங்களை பயன்படுத்த இந்திய விமானப்படைக்கு மோடி உத்தரவு



  • லாலு பிரசாத்திடம் கருப்பு பணம் பாஜ தலைவர் சுஷில் மோடி குற்றச்சாட்டு



  • அரசு விளம்பரங்களில் பிரதமர் படம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு



Facebook

Twitter

ரகுல் ப்ரீத் சிங் சம்பளம் திடீர் உயர்வு பயத்தில் நடிகை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]