திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளிகள் சார்பில் விலங்குகள் பாதுகாப்பு பேரணி
10/8/2025 2:20:49 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பாடசாலை பள்ளியில் இயங்கி வரும் விலங்குகள் பாதுகாப்பு மன்றம் சார்பில், ‘விலங்குகள் பாதுகாப்பு பேரணி’ திருவள்ளூரில் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கரன் முன்னிலை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார். திருவள்ளூர் எம்ஜிஆர் சிலை அருகே துவங்கிய பேரணி நேதாஜி சாலை, பஜார் வீதி, கிழக்கு குளக்கரை சாலை வழியாக காமராஜர் சிலை அருகே நிறைவு பெற்றது.பேரணியில், விலங்குகளின் நலனையும், பாதுகாப்பையும், பொதுமக்கள் அறிந்துக்கொள்ளும் விதமாக, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் மாணவர்கள் பேரணியில் சென்றனர்.இதில், நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், சுகாதார அலுவலர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு விலங்குகளின் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.