இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகத்தில் மழை நீடிக்கும்

10/8/2025 2:05:06 PM
‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு சீன ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச் அபாரம்

சென்னை: தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலனம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி தமிழக கடலோரத்தில் நிலை கொண்டுள்ளதால் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக ஆலங்குடி, செங்கல்பட்டு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பெய்தது. மயிலாடுதுறை, அறந்தாங்கி, சாத்தூர், பெரம்பலூரில் தலா 6 செ.மீ, திருவாரூர், திருவிடை மருதூர், திருச்சி, திருவையாறில் தலா 4 செ.மீ, புதுக்கோட்டை, நத்தம், பழனி, சோளிங்கர், பரமக்குடி, கோத்தகிரியில் தலா 3 செ.மீ., அரியலூர், காஞ்சிபுரம், காரைக்கால், மேலூர், ராசிபுரம், பவானி, நன்னிலம், பெருந்துறை, விருதுநகரில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ள வட கிழக்கு பருவ மழைக்கான சாதகமான சூழல்களும் உருவாகியுள்ளது. இதை உணர்த்தும் வகையில் கடல் பகுதியில் இருந்து தரைப் பகுதியை நோக்கி குளிர்ந்த கடல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இதனால் வட கிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னதாகவே தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில், வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளதால் சென்னை உட்பட தமிழக முழுவதும் வெப்ப சலனம் தொடர்கிறது. இதனால் மழை நீடிக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இரவு நேரத்தில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில
  • தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி : இளங்கோவன் தாக்கு



  • திருத்தணியில் இன்று பிஎஸ்என்எல் செல்போன் சேவை முடக்கம்: வர்த்தகம், வங்கிகள் பாதிப்பு



  • நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பு: விஷால் அணி வெளியூர்களில் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பு



  • ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • இருவேறு விபத்து பெண் உட்பட 3 பேர் பலி



  • ராஜராஜசோழனின் 1030வது சதய விழா தஞ்சையில் 22, 23ம் தேதி நடக்கிறது



  • நீதிமன்றத்தின் தூண்கள் வழக்கறிஞர்கள் சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு



  • ஈரோட்டில் மஞ்சள் மேம்பாட்டு வாரியம் மத்திய அமைச்சர் தகவல்



  • தஞ்சையில் நாளை மமக பொதுக்குழு ஜவாஹிருல்லா பங்கேற்க தமீமுன் அன்சாரி அழைப்பு



  • மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு : வைகோ பேச்சு



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]