இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கனஅடியாக உயர்வு : ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை

10/7/2025 2:47:52 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,899 கனஅடியாக அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க இன்று 2வது நாளாக தடை நீடிக்கிறது.கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனுடன் அம்மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மாண்டியா, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், மேகதாது, அஜ்ஜிப்பாறை, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 7299 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 18,899 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 10,600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட வரத்து அதிகளவில் உள்ளதால், அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.

நேற்று காலை 68.72 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 69.57 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால், நீர்மட்டம் ஒரே நாளில் அரை அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 32.33 டிஎம்சி. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பது டெல்டா விவசாயிகளிடையே மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  ஒகேனக்கல்லில்வெள்ளப்பெருக்குஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று மதியம் வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது இன்று காலை வினாடிக்கு 23 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி கரையோரங்களில் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக இன்றும் நீடிக்கிறது. தீயணைப்பு துறையினர், போலீசார் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சில
  • பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி



  • லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்



  • மழையால் வேகமாக பரவும் சின்னம்மை நோய்; மக்கள் பீதி: சுகாதாரத்துறை நடவடிக்கைக்கு உத்தரவு



  • நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மக்கள் வரவேற்பால் ஆளுங்கட்சி கலக்கம்: திருப்பூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி



  • திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



  • தமிழகத்தில் ஹிட்லர் ஆட்சி : இளங்கோவன் தாக்கு



  • திருத்தணியில் இன்று பிஎஸ்என்எல் செல்போன் சேவை முடக்கம்: வர்த்தகம், வங்கிகள் பாதிப்பு



  • நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பு: விஷால் அணி வெளியூர்களில் நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பு



  • ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ திமுக ஆட்சி மலர்ந்ததும் மீனவர் பிரச்னைக்கு தீர்வு: பவானிசாகரில் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • இருவேறு விபத்து பெண் உட்பட 3 பேர் பலி



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]