இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

கிழக்கு கடற்கரை சாலையில் 5 ஆண்டுகளாக முடியாத பாலப்பணி

10/7/2025 2:33:59 PM
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் 12ம் தேதி வரை போராட்டம் நீட்டிப்பு: போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் அவதி லாரியில் ஏற்றுவதில் கூலி தகராறு ரூ1.75 கோடி நெல் மூட்டைகள் சேதம்: அதிகாரிகள் மெத்தனம்

திருப்போரூர்: கிழக்கு கடற்கரை சாலையில் பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி 5 ஆண்டுகளாகியும் இதுவரை முடியாமல் ஆமை வேகத்தில் நடந்து வருவதால், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தேவனேரி, பட்டிபுலம், சூளேரிக்காடு, நெம்மேலி, வட நெம்மேலி, கிருஷ்ணன் காரணை உள்ளிட்ட 10 கிராம மக்கள், வட்டாட்சியர் அலுவலகம், பத்திரப்பதிவு, மின் வாரியம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, கந்தசுவாமி கோயில் ஆகியவற்றுக்கு செல்ல, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள திருப்போரூர் வந்து செல்கின்றனர். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீனவர்கள் தங்களின் மீன்களை திருப்போரூரில் உள்ள சந்தைக்கு கொண்டு செல்கின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலைக்கும், பழைய மாமல்லபுரம் சாலைக்கும் இடையே பக்கிங்காம் கால்வாய் உள்ளதால், மேற்கண்ட பகுதி மக்கள் கோவளம், கேளம்பாக்கம் வழியாகவோ அல்லது மாமல்லபுரம், பையனூர் வழியாகவோ 30 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், இப்பகுதி மக்களின் நலன் கருதி கடந்த திமுக ஆட்சியில், கிழக்கு கடற்கரை சாலையையும், பழைய மாமல்லபுரம் சாலையையும் இணைக்கும் வகையில் சுனாமி புனரமைப்பு திட்டத்தின் கீழ், திருப்போரூரில் பக்கிங்காம் கால்வாய் மீது ரூ. 4.8 கோடியில் உயர் மட்ட பாலம் மற்றும் இணைப்பு சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி திட்டப்பணிகள் துவங்கின.

தற்போது, பாலப்பணிகள் முடிந்த நிலையில் இருபக்க சாலைகள் அமைத்தல், ரிவிட்மெண்ட் எனப்படும் சாலைச்சரிவு அமைத்தல் ஆகிய பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. பாலத்தின் கிழக்கு முனையில் இருந்து நெம்மேலி வழியாக இன்னும் தார் சாலை முழுமையாக அமைக்கப்படவில்லை.நெடுஞ்சாலை துறை நிர்வாகம் 90 சதவீத பணியை முடித்து விட்ட நிலையில், 10 சதவீத பணியை மட்டும் முடிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.இதனால், இப்பகுதி மக்கள் தினசரி கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பாலப்பணியை விரைவில் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும் சில
  • விஐடி பல்கலைக்கழகத்தில் இன்டர்நெட் மாற்றங்கள் குறித்து கருத்தரங்கம்



  • ஐயங்கார்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளியின் மேற்கூரை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை



  • மணலியில் மக்களை தேடி வருவாய் முகாம் 80 மனுக்களுக்கு தீர்வு



  • அகதிகள் முகாமில் குறைதீர் கூட்டம் : ஐஜி பங்கேற்பு



  • கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவர் மீட்பு



  • வையாவூர் ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்ட கலந்தாய்வு



  • திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளிகள் சார்பில் விலங்குகள் பாதுகாப்பு பேரணி



  • பீர்க்கன்காரணையில் டிரான்ஸ்பார்மர் அருகே சைக்கிள் நிறுத்தம் மாணவ, மாணவிகள் அவதி



  • தமாகா, கொமதேக நிர்வாகியின் ஐடி திடீர் சோதனை



  • திருவொற்றியூரில் 2628 பேருக்கு இலவச மிக்சி, கிரைன்டர் எம்எல்ஏ குப்பன் பங்கேற்பு



Facebook

Twitter

சம்பளம் உயர்த்தினால் தப்பு என்ன? ரகுல் ப்ரீத் பதிலடி
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]