இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தஞ்சை அருகே துப்பாக்கியுடன் சிக்கிய ரவுடிகள்

9/28/2015 2:23:35 PM
சன் குழும எப்எம்கள் ஏலத்தில் பங்கேற்க அனுமதி: தனி நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்த மத்திய அரசு மனு தள்ளுபடி நெல்லையப்பர் கோயிலில் அகழ்வாராய்வு பழங்கால கல்செக்கு யாழி கண்டுபிடிப்பு

தஞ்சை: துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிடிபட்ட 2 திருச்சி ரவுடிகளிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தஞ்சை அருகே தென்பெரம்பூர் ஆற்றங்கரையில் பட்டாக்கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் காரில் நின்ற திருச்சியை சேர்ந்த ரவுடி 2 பேரை தஞ்சை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 துப்பாக்கி, 4 தோட்டாக்கள் மற்றும் பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர். தஞ்சையை அடுத்த கள்ளபெரம்பூர் அருகே உள்ள தென்பெரம்பூர் ஆற்றங்கரையில் சந்தேகத்தின் பேரில் ஒரு கார் நிற்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.  

போலீசார் அங்கு சென்று, காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டபோது காரின் பின்பகுதியில் ஒரு துப்பாக்கி(ரிவால்வர்), அதில் 4 தோட்டாக்கள் மற்றும் பட்டா கத்தி, அரிவாள் ஆகியவை இருந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரைச் சேர்ந்த ஜெய் என்ற ஜெயக்குமார்(33), இவரது நண்பர் திருச்சி மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த முருகையன் மகன் ரஜினி என்ற கருப்பையா(31) என்பதும், இவர்கள் மீது திருச்சியில் 6 கொலை வழக்கு உட்பட 9 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து ஆயுதங்கள், காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். தஞ்சைக்கு காரில் ஆயுதங்களுடன் எதற்காக வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் கடந்த சில தினங்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் மீது தாக்குதல் முயற்சி நடந்தது. இதில் இவர்களுக்கு ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் சில
  • இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை



  • கோட்டையில் முதல்வர் செல்ல இருந்த பாதையில் பெட்ரோல் ஊற்றி தம்பதி தீக்குளிக்க முயற்சி



  • அக்.8ம் தேதி திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்



  • உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டலா? கழிவறையில் சத்தம் கேட்டதால் பரபரப்பு



  • சென்னை வர்த்தக மையம் ரூ.298 கோடியில் விரிவாக்கம்



  • தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



  • சென்னை ஆர்.கே. நகரில் கலை அறிவியல் கல்லூரி



  • ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி ஒருவர் கைது; காவல்நிலையம் முற்றுகை



  • பத்திரிகையாளர் ஓய்வூதியம் உயர்வு சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு



  • கழிவறைக்குள் தோழி விளையாட்டாக அடைத்து வைத்தபோது 6 வயது சிறுமி பரிதாப பலி; பள்ளி முற்றுகை



Facebook

Twitter

Chennai Airport secretly shooting the remake
சென்னை விமான நிலையத்தில் ரகசியமாக நடந்த ரஜினி பட ஷூட்டிங்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]