ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா
9/26/2015 12:42:10 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் 3.5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நிர்வாகம் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் பத்மாவதி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் ராசமாணிக்கம், பேரூராட்சி துணை தலைவர் ஷேக்தாவூது, செயல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் அரசு பள்ளிகளின் முன்பும், ரெட்டி தெரு, செட்டி தெரு, அம்பேத்கர் நகர், சாவடி தெரு, திருவள்ளூர் சாலை, அண்ணாநகர், நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.விழாவில் கவுன்சிலர்கள் தீபராணி, செல்வராஜ், வள்ளி, சக்திவேல், உஷா சங்கர், இளவரசி, ஜெகன், முருகேசன் ஆகியோரும், மகளிர் குழுவை சேர்ந்த உஷா, தனலட்சுமி, கோமளா, காமாட்சி, பார்வதி ஆகியோரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.