வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி
9/5/2025 12:54:03 PM
நாகை: வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி வரும் 7ம் தேதி பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து உள்ளனர்.நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. பிரசித்திபெற்ற இத்தேவாலயத்திற்கு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இங்கு ஆண்டுதோறும் பெருவிழாவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 29ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கிது.அன்று மாலை பேராலய முகப்பில் உள்ள கொடி மரத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் புனித கொடியை ஏற்றி வைத்தார்.
வரும் 7ம் தேதி மாலை மாதா பிறந்த நாளைெயாட்டி பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதையொட்டி பேராலய கலையரங்கில் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. பேராலய அதிபர் பிரபாகரன் முன்னிலை வகிக்கிறார்.8ம் தேதி காலை பேராலய கீழ் கோயிலில் ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. விழாவையொட்டி பாத யாத்திரையாகவும், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியி–்ல் குவிந்து உள்ளனர்.மேலும் பெரிய தேர் பவனியை காண ஏராளமானவர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டுள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்படுகிறது. கடற்கரை, பழைய வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.