இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு

9/5/2025 12:52:55 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வெங்கடாபுரத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா நடத்த அனுமதி மறுத்ததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் இன்று காலை குவிந்தனர். இதனால் பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா நடத்த ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியரிடம் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு மற்றொரு சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து திருவிழா நடத்த தடை செய்யப்பட்டதாத தெரிகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் நேற்றிரவு கலெக்டர் சண்முகத்தின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் சந்திரசேகரன், காஞ்சிபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் சாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை (இன்று) காலை 7 மணிக்கு கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த அழைத்திருப்பதாகவும், தற்போது அவர் வெளியே இருப்பதாகவும் வட்டாட்சியர் சந்திரசேகரன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.இந்நிலையில் போலீசார் கூறியபடி இன்று காலை வெங்கடாபுரம் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அதுபோன்று மற்றொரு சமுதாய மக்களும் குவிந்தனர். இதனால் அசம்பவாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில
  • 9ல் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம்



  • ஆதனூரில் கடன் தொல்லையால் மனைவி மாயம்



  • 200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி



  • வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி



  • வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்



  • நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி



  • அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி



  • நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி



  • தைலாவரத்தில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் போதை ஆசாமியால் விபரீதம்



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]