இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கும்பகோணம் ராமசாமி கோயிலில் 9ம் தேதி கும்பாபிஷேகம் : நாளை யாக சாலை பூஜை துவக்கம்

9/5/2025 12:22:18 PM
ஐஎஸ் தீவிரவாதத்தால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கிடையாது தாயை பார்க்க செல்லும் மகன்கள் போல மத்திய அமைச்சர்கள்-ஆர்எஸ்எஸ் சந்திப்பு: வெங்கய்யா நாயுடு பெருமிதம்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள ஐந்து முக்கிய வைணவத் திருக்கோவில்களுள் ஒன்று கும்பகோணம் ராமசாமி கோயில். மகாமகம் தொடர்புடையை வைணவ கோயில்களில் பிரதானமானது.   வெளிமண்டபத்தில் 64க்கும் மேற்பட்ட தூண்கள் சிற்ப வேலைபாடுகளுடன் கலைக்கோயிலாக உள்ளது. உள்பிரகாரத்தில் ராமாயண ஓவியங்கள் அமையப்பெற்றுள்ளன. மகாமக திருவிழாவை முன்னிட்டு சுமார் ரூ.1 கோடி செலவில் இக்கோயிலில் மகாகும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து  இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம், கட்டை கோபுரம், ராமர் விமானம், தெற்கு விமானம் உள்ளிட்ட 4 விமானங்களையும் திருப்பணி செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. இத்திருப்பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகப்பணிகள் வரும் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மூன்றரை அடி உயரம் கொண்ட மூலவர் கோபுர கலசம், தலா 7 அடி உயரம் உடைய தங்க முலாம் பூசப்பட்ட 7 ராஜகோபுர கலசங்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட கருடவாகனம் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் ஆகியவைகள் கோயிலில் நிர்மாணிக்கப்பட உள்ளன. மேலும் கோயிலில் 7வது திருநாளன்று நடைபெறும் சூர்னோஸ்வம் விழாவில் ராமர் சீதை, லட்சுமணர் புறப்பாடு நடைபெறும். ஏற்கனவே கோயிலில் இருந்த கோரதம் சிதிலமடைந்ததால் சென்னை உபயதாரர் மூலம் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் முழுவதும் தேக்கு மரத்திலான கோரதம் தயார் நிலையில் உள்ளது.

புதிதாக வடிவமைக்கப்பட்ட கோரதம், தங்கமுலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம், ராஜகோபுர கசலங்கள், மூலவர் கோபுர கலசம், தங்கமுலாம் பூசப்பட்ட கருட வாகனம், படிச்சட்டங்கள் ஆகியவைநேற்று கோயிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. கும்பாபிஷேக விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. நாளை காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து ஏழு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, 9ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.45 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மேலும் சில
  • 9ல் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம்



  • ஆதனூரில் கடன் தொல்லையால் மனைவி மாயம்



  • 200 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி



  • வேளாங்கண்ணியில் நாளை மறுநாள் பெரிய தேர் பவனி



  • வேலூர் மத்திய சிறையில்செல்போன், போதைப்பொருள் சப்ளை : டாக்டர் மாற்றம்



  • கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு அனுமதி மறுப்பு : கலெக்டர் அலுவலகம் முன்பு இரு சமுதாய மக்கள் முற்றுகை : போலீசார் குவிப்பு



  • நந்திவரத்தில் முட்புதர்கள் மண்டிய பெண்கள் பள்ளி : மாணவிகள் அவதி



  • அதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு : விஜயகாந்த் குற்றச்சாட்டு



  • கூடுவாஞ்சேரியில் ரயில் மோதி வாலிபர் பலி



  • நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் மரக்கன்று நடுவிழா: ஏழை, மாணவர்களுக்கு உதவி



Facebook

Twitter

டாப்ஸியின் புது பாய்பிரண்ட்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]