புத்தர் கோயில்
9/4/2025 2:19:21 PM
சீனாவின் தியான்ஜின் மாகாணத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு வெளியே கடந்த 2 நாட்களுக்கு முன் இரட்டை தலையுடன் பன்றிக்குட்டி ஒன்று பலகீனமான நிலையில், எழுந்திருக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தது.அந்த இரட்டை தலை, 4 கண்கள், 3 காதுகளுடன் 30 செ.மீ நீளமும், 1.5 கிலோ எடையுடன் ஒரே உடம்புடன், பசியில் அந்த பன்றிக்குட்டி தவித்துக் கொண்டிருந்தது.அந்த பன்றிக்குட்டியை பலரும் அதிசயத்துடன் பார்த்து சென்றார்களே தவிர, அதைக் காப்பாற்ற முன்வரவில்லை.அப்போது சென்காவ் கவுன்டி, பெய்யான் கிராமத்தை சேர்ந்த பன்றி விவசாயி ஜிங் காங்லான், அவரது மனைவி அதை எடுத்து புட்டிபால் கொடுத்ததுடன் அதை வளர்க்க எடுத்து சென்றனர்.